Uncategorized
” வாரத்துக்கு ஏழு நாட்கள்..! – ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் எது தெரியுமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பொதுவாகவே நவகிரகத்தின் ஆளுமையால் தான் இந்த பிரபஞ்சம் இயங்கி வருகிறது. இதனை நாம் ஜோதிட ரீதியாக கூறினாலும் அறிவியல் ரீதியாக எடுத்துக் கொண்டாலும் இரண்டிலுமே இருக்கின்ற கருத்து ஒன்றுதான். எனவே கோள்களின் அடிப்படையில் வாரத்தில் ஏழு நாட்கள் உள்ளது. இந்த ஏழு நாட்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
திங்கட்கிழமை
பொதுவாக திங்கட்கிழமையை சோமவாரம் என்று அழைப்பார்கள். இந்த தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று நீங்கள் சிவனை வழிபடுவது சிறப்பை தரும். மேலும் இந்த நாளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் போன்றவற்றை நீங்கள் படித்து வழிபடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு ஏற்படும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் அந்தஸ்து உயரும்.
செவ்வாய்க்கிழமை
செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். அவ்வாறு வழிபடும் போது...