Uncategorized
சிறப்பு வாய்ந்த மாசி பௌர்ணமி – இதை செய்தால் சகல செல்வங்களும் பெருகும்..!
எல்லா பௌர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தது தான். அதிலும் குறிப்பாக மாசி மாதம் ஏற்படுகின்ற பௌர்ணமிக்கு அபூர்வ சக்தி இருப்பதாக நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த மாசி மாத பௌர்ணமியானது வளர்பிறை சந்திரன் ஏற்படுகின்ற நாளில் வருகிறது.
மாசி மாதத்தில் வருகின்ற மக நட்சத்திரம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது என்பதால் தான் மாசி மகப் பௌர்ணமி தினத்தை சிறப்பாக அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் மகராசிக்கு சொந்தக்காரரான கேது பகவான் ஞானத்தையும் மோசத்தையும் அள்ளி வழங்குபவர். இந்த ஞானத்தை நாம் பெறுவதற்காகவும் செல்வத்தை அடைவதற்காகவும் மாசி மக பௌர்ணமி விரதத்தை மேற்கொண்டு சந்திர பகவானை வழிபட அனைத்து சம்பத்துக்களும் நமக்கு வந்து கிடைக்கும்.
மாசி மக பௌர்ணமி அன்று அனேக சிவன், மற்றும் விஷ்ணு, முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் யாகங்கள் என பல உற்சவங்கள் நடைபெறும். மாசி பௌர்ணமி தினத்தன்று விரதம் இருந...