Uncategorized
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முந்தும் EPS..! – சரிவை சந்திக்கும் ஸ்டாலின்..! – லயோலா கருத்து கணிப்பு முடிவுகள்..!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை நோக்கித்தான் ஒட்டுமொத்த தமிழக அரசியல் நோக்கர்களின் பார்வையும் திரும்பி இருக்கிறது. பொதுவாக தேர்தல் என்று வரும் பொழுது பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சார்பாக இயங்கி வரும் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்ற அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
ஈரோடு கிழக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கவனம் முழுதும் ஈரோடு கிழக்கில் குவிந்திருக்கின்றது. வாக்காளர்களுக்கு பணம், பாத்திரங்கள், வெள்ளி கொலுசு, கோழிக்கறி என சகல வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.
இந்த குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் கூட.. மறுபக்கம் இந்த தேர்தலில் ஜெயிக்கப் போவது யார்.? என்ற போட்டி உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றது. இந்நிலையில், லயோலா கல்லூர...