Uncategorized
“ஈசன் குடிகொண்டுள்ள வெள்ளிங்கிரி மலை ..!” – வியக்க வைக்கும் தென் கைலாயத்தின் சிறப்புகள்..!!
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஈசனை வழிபட வழிபடாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சிவனை வழிபட்டு தழைத்து உள்ளது. பக்தர்களுக்கு மிக எளிதில் இறங்கி வரம் கொடுக்கும் கடவுளான பரமேஸ்வரன் குடியிருக்கும் தென் கைலாயமாம் வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளிங்கிரி மலையானது, பூண்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. பசுமைக்கு பஞ்சம் இல்லாத அழகிய மரங்களோடு இயற்கையோடு இணைந்து இருக்கக்கூடிய இந்த மலையில் இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லை என்று கூறலாம்.
மேற்கு தொடர்ச்சி மலையின் மத்தியில் அமைந்திருக்கும் எந்த சிவதலமான வெள்ளிங்கிரி மலையில் எண்ணற்ற அற்புதங்கள் நிறைந்துள்ளது.
இந்த மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் சுமார் 50 கிலோ மீட்டர் அளவு பயணம் மேற்கொண்டால் மட்டுமே இந்த மலையில் இருக்கின்ற...