Uncategorized
“வேண்டிய வரத்தை அள்ளி தரும் அதிசயம் மணக்குள விநாயகர்..!” வியக்க வைக்கும் தகவல்கள்…!!
முதன்முதற்கடவுளான விநாயகப் பெருமான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். இவருக்கு ஆடம்பரமாக கோயில்கள் தேவையில்லை. அரச மரத்திலும் அன்போடு ஆசியை வழங்கக்கூடிய அருள் உள்ளம் கொண்டவராக திகழ்கிறார்.
அந்த வரிசையில் இந்தியாவிலேயே மணக்குள விநாயகருக்கும் மட்டும் தான் தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் உள்ளது என்பதை எத்தனை பேருக்கு தெரியும்.
பிரம்மச்சாரியாக கருதப்படக் கூடிய விநாயகர் பெருமானுக்கு எந்த தலத்தில் தான் திருமணம் நடந்து இருக்கிறது. இந்த தளத்தில் இவர் சித்தி, புத்தி என்று 2 மனைவிமாரோடு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
பிரான்ஸ் காலனி பகுதியாக இருந்த புதுச்சேரியில் தான் இந்த மணக்குள விநாயகர் இருக்கிறார். மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்கக்கூடிய இந்த மணக்குள விநாயகர் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றும் வியக்கும் வண்ணத்தில் தான் உள்ளது.
சுமார் 8000 சதுர அடி பரப்பளவில் இந்தக் கோயில் பர...