Tuesday, September 24
Uncategorized

“வேண்டிய வரத்தை அள்ளி தரும் அதிசயம் மணக்குள விநாயகர்..!” வியக்க வைக்கும் தகவல்கள்…!!

முதன்முதற்கடவுளான விநாயகப் பெருமான் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். இவருக்கு ஆடம்பரமாக கோயில்கள் தேவையில்லை. அரச மரத்திலும் அன்போடு ஆசியை வழங்கக்கூடிய  அருள் உள்ளம் கொண்டவராக திகழ்கிறார். அந்த வரிசையில் இந்தியாவிலேயே மணக்குள விநாயகருக்கும் மட்டும் தான் தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் உள்ளது என்பதை எத்தனை பேருக்கு தெரியும்.  பிரம்மச்சாரியாக கருதப்படக் கூடிய விநாயகர் பெருமானுக்கு எந்த தலத்தில் தான் திருமணம் நடந்து இருக்கிறது. இந்த தளத்தில் இவர் சித்தி, புத்தி என்று 2 மனைவிமாரோடு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  பிரான்ஸ் காலனி பகுதியாக இருந்த புதுச்சேரியில் தான் இந்த மணக்குள விநாயகர் இருக்கிறார். மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்கக்கூடிய இந்த மணக்குள விநாயகர் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றும் வியக்கும் வண்ணத்தில் தான் உள்ளது.  சுமார் 8000 சதுர அடி பரப்பளவில் இந்தக் கோயில் பர...
Uncategorized

” வழிபாட்டில் விளக்குகளின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள்..!” என்னென்ன தெரியுமா?

 ஆன்மீக வழிபாட்டில் விளக்குகளின் முக்கியத்துவம் இன்றியமையாதது. விளக்குகள் இல்லாமல் எந்த ஒரு வழிபாடும் பூர்த்தி ஆவது இல்லை. இந்துக்களின் வழிபாட்டில் இந்த விளக்குக்கு என்று ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை கொடுக்கப்பட்டு உள்ளது.  மேலும் இந்த விளக்குகளை ஏற்றி வழிபடுவதன் மூலம் தான் இறைவனின் அருளை மிக விரைவில் பெறுவதோடு நமது கர்ம வினைகளும் நீங்குகிறது என்று சாஸ்திரங்களில் கூறியிருக்கிறார்கள். பொதுவாக விளக்கு ஏற்ற உகந்த நேரமாக நாம் கருதுவது பிரம்ம முகூர்த்தமான 4 மணி முதல் 6:00 மணி வரையும் மாலை நேரமெனில் அது ஆறு மணி முதல் 7 மணி வரையும் என சாஸ்திரங்கள் கூறி இருக்கிறது.  இந்த நேரத்தில் நாம் விளக்கினை ஏற்றி வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகள் மட்டுமல்லாமல் நமக்கு புண்ணியமும் ஏற்படுமாம். செய்த பாவத்தை நீக்கக்கூடிய சக்தி பிரதோஷ வேளைக்கு உள்ளது. இந்த பிரதோஷ வேளையில் 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் மாலை நேரத்தில்...
Uncategorized

” உங்கள் வீட்டுத் தோட்டம் அழகாக இருக்க வேண்டுமா…!” – இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்க..!!

எலி வங்கு என்றாலும் தனிவங்கு வேண்டும் என்று கூறுவார்கள். அது போல நமக்கு என்று ஒரு வீட்டை உருவாக்கி விட்டவர்கள் அனைவருமே வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதற்கும் அதை உருவாக்குவதற்கும் திட்டங்களை போடுவார்கள்.  அப்படி உங்களது வீட்டுத் தோட்டம் அழகாக இருக்க வேண்டும் என்றால் எந்தெந்த நிலையில் நீங்கள் அதை செயல்படுத்த வேண்டும் என்பதற்கான குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.  வீட்டுத் தோட்டத்தில் குறிப்பாக அனைவருமே ஏராளமான பூக்களை தரும் பூச்செடிகளையும்  வீட்டுக்கு தேவையான காய்கறி செடிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணக்கூடிய மூலிகை செடிகளை தான் தற்போது வளர்த்தி வருகிறார்கள்.  அந்த வரிசையில் நீங்கள் முதலில் சரியான இடத்தை தேர்வு செய்து கொண்ட பிறகு தான் இது போன்ற செடிகளை நீங்கள் வளர்க்க முடியும். எனவே சரியான இடத்தை முதலில் தேர்வு செய்வதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  மேலும் அந்த இடமானது தோட்டம் அ...
Uncategorized

“வீட்டில் அட்டாச் பாத்ரூம் இருக்கா..!” இப்படி இருந்தா நோ ப்ராப்ளம்… இல்லைனா மாத்தி அமையுங்க..!!

இன்று நவீன காலத்தில் வீடுகளில் அட்டாச் பாத்ரூம் இல்லாமல் இருக்காது. ஆனால் அதுவே பழைய காலங்களில் வீட்டில் கழிவறைகளை வீட்டுக்குள் வைக்கவே மாட்டார்கள். வீட்டிலிருந்து சில அடி தூரம் தள்ளித்தான் இருக்கும். மேலும் எந்த அட்டாச் பாத்ரூம் இதுபோல இருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் உங்கள் வீடுகளில் ஏற்படாது. அது வாஸ்து சாஸ்திரப்படி இல்லையென்றால் உங்கள் வீட்டின் மகிழ்ச்சியையும் நிதி நிலைமையும் அது வெகுவாக பாதிக்கும் என்பதால் இந்த கட்டுரையை தெளிவாக படித்து உங்களுக்கு தேவையான நிவர்த்திகளை நீங்களே செய்து கொள்ள முடியும். 👍அட்டாச் பாத்ரூம் இன் நுழைவாயிலானது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். மேலும் தென்மேற்கு திசையில் கதவானது இருக்கவே கூடாது. குளியலறை உங்கள் படுக்கை அறைக்கு அருகில் இருந்தால் உங்கள் பணிகள் முடிந்த பிறகு அந்த குளியல் அறை கதவை எப்போதும் மூடித்தான் வைத்திருக்க வேண்டும். 👍...
Uncategorized

” மனம் மயக்கும் நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார்…!” – எப்படி செய்வது பார்க்கலாமா?

 பல வகைகளில் வீடுகளில் நீங்கள் முருங்கைக்காய் சாம்பாரை வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். அப்படி தொடர்ந்து சாப்பிடுவதால் உங்களுக்கு முருங்கைக்காய் சாம்பார் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டு இருக்கலாம்.  ஆனால் உங்களை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டக்கூடிய நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாமா.  முருங்கைக்காய் சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள் 1.250 கிராம் துவரை பருப்பு 2.10 சின்ன வெங்காயம் 3.இரண்டு முருங்கைக்காய் 4.தக்காளி 2 5.பச்சை மிளகாய் 3 6.காந்தாரி மிளகாய் 4 7.பத்து பல் பூண்டு 8.இரண்டு கத்திரிக்காய் 9.கடுகு, 10.சீரகம் 11.உளுத்தம் பருப்பு 12.நெய் 13.மஞ்சள் தூள் 14.மிளகாய் தூள் 15.சீரகத்தூள் 16.பெருங்காயத்தூள் 17.புளி கரைசல் 18.எண்ணெய் 19. உப்பு தேவையான அளவு செய்முறை துவரம் பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் முன்னதாக ஊற வைத்து பின் குக்கரில்  மூன்று முதல் ...
Uncategorized

” சுவையான மட்டை அரிசி அவல் உப்புமா..! ” – வாயை பிளக்க வைக்கும் அளவு இருக்கும் சத்துக்கள்..!!

மட்டை அரிசியில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதோடு பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்தை அள்ளித் தரக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. எனினும் வெள்ளை நிற அரிசியை விரும்பி உண்ணக்கூடிய அனைவரும் இந்த  மட்டை அரிசி அவல் உப்புமா  நன்மைகளையும் சத்துக்களையும் தெரிந்து வைத்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான். மட்டை அரிசி அவலில் இருக்கும் சத்துக்கள் 1.நார்ச்சத்து 2 வைட்டமின் பி 3.கால்ஷியம் 4.ஜிங்க் 5.இரும்பு சத்து 6.மக்னீசியம் மட்டை அரிசி அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள் 1.கால் கிலோ மட்டை அரிசி அவல் 2.சின்ன வெங்காயம் பொடி பொடியாய் நறுக்கியது 3.பச்சை மிளகாய் 4 வரமிளகாய் ஒன்று 4.தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் 5.கடுகு ஒரு டீஸ்பூன் 6.உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன் 7.பெருங்காயம் சிறிதளவு 8.தக்காளி நான்கு பொடி பொடியாக நறுக்கியது 9.இரண்டு பல் பூண்டு 10.தேவையான அளவு உப்பு 11.கருவேப்பிலை செய்முறை முதலில...
Uncategorized

“ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை மறைய வேண்டுமா? ” – தேங்காய் எண்ணெய் பிளஸ் இத தேய்த்து பாருங்க சூப்பர் ரிசல்ட் தரும்…!

வளரும் தலைமுறை ஆண்களுக்கு மாபெரும் பிரச்சனையாக இருப்பது தலையில் வழுக்கை விழுவது தான். இந்த தலை வழுக்கையை சரி செய்வதற்கு இயற்கையில் எண்ணற்ற வழிகள் உள்ளது.  அந்த வரிசையில் தற்போது இளம் வயதிலேயே ஏற்படும் வழுக்கையை நீக்க நீங்கள் தேங்காய் எண்ணெய் ஒரு சில பொருட்களை இணைத்து பயன்படுத்தினாலே அற்புதமான ரிசல்ட் ஐ பெற முடியும். பொதுவாகவே தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஊட்டத்தை கொடுக்கக்கூடிய கொழுப்புகளை கொண்டுள்ளது. மேலும் இதில் ஆல்பா டோகோபெரால் போன்ற வேதிப்பொருட்கள் இருப்பதால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மருத்துவ குணம் நிரம்பி இருக்கும் இந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதால் எண்ணற்ற நன்மைகள் அனைவரும் பெறலாம்.  அந்த வகையில் எந்த தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து அதை லேசாக சூடு செய்து பின் தலையில் மசாஜ் செய்ய வேண்டும் அவ்வாறு மசாஜ் செய்யும் போது உங்கள் விரல்களால் நன்கு அழுத்தம் கொடுத்து வேர்...
Uncategorized

” முடி உதிர்தல்… வறட்சியான முடிக்கு பை பை சொல்ல வேண்டுமா? ” – தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் கற்றாழை ஜெல் ஹேர் மாஸ்க்…!

பொதுவாகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் தலைமுடி மிக நேர்த்தியான முறையில் வளர்வதற்காக எண்ணற்ற பொருட்களை அன்றாட வாழ்க்கையில் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் அடர்த்தியான அழகான தலைமுடியை பெற விரும்பினால் அதற்கு கட்டாயம் நீங்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதின் மூலம் உங்கள் கூந்தல் பள பள என பார்ப்பவர்களின்  மனதை அலை பாய வைத்து விடும். அப்படிப்பட்ட இயற்கையான கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கற்றாழை நெல்லி ஹேர் மாஸ்க்:  ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்யில் நீங்கள் நெல்லிக்காய் சாறை சேர்த்து சேர்க்க வேண்டும். இதன் பிறகு இதை நன்கு கலந்து விட்டு உங்கள் வேர்க்கால்கள் வரை நன்கு ஊடுருவிச் செல்லும் வண்ணம் தலைமுடியில் தேய்க்க வேண்டும். ...
Uncategorized

” கடுகு சிறுத்தாலும் காடு கொள்ளாது..!” குட்டியூண்டு ஓமம் – த்துக்குள் இவ்வளவு நன்மைகளா?..!

 சீரகத்தைப் போலவே ஓமத்திக்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளது. குறிப்பாக சுவாசம் மண்டலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நோய்களையும் தடுக்கக்கூடிய அற்புத ஆற்றல் கொண்ட ஓமம் ஆனது சளி முதல் ஆஸ்துமா வரை குணப்படுத்தக் கூடியது. அதுமட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை இந்த ஓமம் வழங்கி வருகிறது.  இனிமேல் அஜீரணக் கோளாறு உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் ஜெலுசில்லையோ அல்லது இனோவையோ தேடி குடிக்க வேண்டிய அவசியமே இல்லை.  உங்கள் வீட்டில் எப்போதும் ஓமத்தை 100 கிராம் அளவு வாங்கி வைத்திருந்தால் இந்த அஜீரணக் கோளாறு நீங்கள் எளிதில் சரி செய்ய முடியும். ஓமத்தை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம் அல்லது வாணலியில்  லேசாக வறுத்து நீரினை விட்டு இளம் சூட்டில் பருகுவதின் மூலம் நீங்கள் உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.  பொதுவாக குளிர் காலங்களில் அடிக்கடி அஜீரண பிரச்சனை ஏற்படும் அவர்கள் இந்த இயற்கை வழியை ...
Uncategorized

” உங்க கல்லீரலை safe – பா பாதுகாக்க…!” கட்டாயம் இந்த உணவுகளை சேர்த்தால் 100% கல்லீரல் சுத்தமாகும்…!

மனிதருக்கு அவரிடம் இருக்கக்கூடிய உறுப்புக்கள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமான ஒன்று. இதன் மூலம் தான் அவனது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. அந்த வகையில் கல்லீரல் - லை சுத்தமாக வைத்துக்கொள்ள நீங்கள்  எந்தெந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் அதை உணவில் சேர்க்க வேண்டும் என்பதை இனி பார்க்கலாம். பன்னீர் திராட்சை பொதுவாகவே பன்னீர் திராட்சை பழம் ஆனது உடலை நன்கு சுத்தப்படுத்தக்கூடிய தன்மை உள்ளதோடு கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடிய சக்தி இந்த பன்னீர் திராட்சைக்கு உள்ளது. மேலும் திராட்சையில் இருக்கின்ற நரின்ஜெனின் என்ற ஆன்ட்டி ஆக்சைடுகள் கல்லீரலில் இருக்கும் கொழுப்புச்சத்தை கரைக்க உதவுவதால் கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்புகள் நீங்கி ஆரோக்கியமாக கல்லீரலை பாதுகாக்க உதவி செய்கிறது.  பீட்ரூட் அதுபோலவே பீட்ரூட்டில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கான நார்ச்சத்து, மாக்னீஷ், பொட்டாசியம், வைட்டமின்...