Uncategorized
இந்தப் படத்துலயும் இதுதான் கதையா ? இயக்குனர் துவாரக ராஜாவின் படம் – பரோல்!
திரை உலகை பொறுத்தவரை சின்ன பட்ஜெட் படம் என்றாலும் கதை சிறப்பாக இருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். அந்த வரிசையில் தற்போது ட்ரிப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக்ராஜா இயக்கிய இருக்கக்கூடிய படம் தான் பரோல். இந்த படத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த அண்ணன் மற்றும் தம்பியின் மோதல்களை பரோல் என்ற பெயரில் திரையிட போகிறார்கள்.
இந்த படத்தை குறித்து இயக்குனர் துவாரக்ராஜா கூறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கு என்று ஒரு கதை இருக்கும். அந்த கதையை பின்னால் சொல்லப்படாத அல்லது சொல்லமுடியாத கதையாக இருக்கும். அது போல தான் பரோல் படத்தின் கதையும் இருக்கிறது.
ஓரே குடும்பத்தில் பிறந்த காரணத்தால் தனக்குப் பிடிக்காத கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறான் தம்பி அப்போது தம்பிக்கு அண்ணனுக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், பரபரப்பான ந...