தமன்னாவுக்கு இருக்கும் ரொம்ப நாள் ஆசை!.. கல்யாணம் ஆனதை மறந்து கார்த்தி செய்த சம்பவம்..!
தமிழ் சினிமாவிற்கு மிக தாமதமாக என்ட்ரி கொடுத்தாலும் கூட மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகர் கார்த்தி. ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக்கு சினிமாவின் மீது ஈடுபாடு என்பதே கிடையாது.
வெளிநாட்டிற்கு சென்று தொழில்ரீதியான படிப்புகள் மீதுதான் அவர் கவனம் செலுத்தி வந்தார். படித்து முடித்த பிறகு ஏதாவது ஒரு பெரிய தொழில் செய்து அதில் முன்னேறுவார் கார்த்தி என்றுதான் அவரது குடும்பமும் எதிர்பார்த்தது.
ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக சினிமாவில் வளர்ச்சியை கண்டார் கார்த்தி. தன்னுடைய 27 வது வயதில் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கார்த்திக்கு வார்த்தைக்கு வந்தது.
தமிழில் வாய்ப்பு:
ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து விட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தி நடித்தார். ஆனால் அமீர் அந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி இர...