Uncategorized
உடல் நலம் காக்கும் முடக்கத்தான் கீரை.
மூட்டு வலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை. இந்தியாவில் சுமார் 65 சதவிகித மக்கள் மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர் இதில் 85 சதவீதம் பெண்கள் அதிகளவு பாதிப்படைகிறார்கள். நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.
அதுதான் முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு இயற்கையிலேயே மிகச்சிறந்த மருந்து இதுதான். முடக்கற்றான் கீரையை பயன்படுத்தினால் நிச்சயம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி மூட்டு வலிகள் குணமாகும். முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர் .
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து ...