Uncategorized
அதிகமாக கோபம் வந்தால் குண்டாவீர்கள்.
செரிச்சல் உணரப்படும் மேலும் காரமான உணவுகள் உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால் இது கோபத்தை தூண்டும் என்று கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கூறுகிறார்கள்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ஆத்திரம் அழிவைத் தரும் என்பது போன்ற பழமொழிகளை வைத்தே கோபப்படுவதால் நமக்கு ஏற்படும் சிக்கல்களை புரிந்துகொள்ளலாம்.
அதிகமாக கோபப்படுவதற்கு மாரடைப்பு, இதய நோய்கள் உண்டாகும் என்று கூறுகிறார்கள். இது மட்டுமல்ல அதிகமாக கோபப்படுவதால் உடல் எடை கூடும். அந்த எடையை குறைப்பது மிகவும் சிரமம் என்றும் கூறுகிறார்கள். நீண்ட நாள் வாழ வேண்டுமென்றால் கோபத்தை குறைத்தாக வேண்டும் .
கோபத்தை கட்டுப்படுத்தும் வழிகள்
ஒன்று குறுகிய காலத்துக்கு மற்றொன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு.
ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டும் நிலையில் இருந்தாலும் அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன ந...