Uncategorized
கோகர்ண நாதேஸ்வரர் கோவில்
கோகர்ண நாதேஸ்வரர் 2 லட்சம் சதுர அடிகளைக் கொண்ட இந்த கோவில் சலவை கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுர அமைப்பு, தமிழக கோவில்களின் கோபுர தோற்றத்தை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தில் தேவி அன்னபூரணியின் சிலை தங்கத்தால் உருவாக்கப்பட்டது. கல்வியும் கலைத் துறையும் மேம்படுவதற்காக இந்த கோவிலில் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்தக் கோவிலில் மூலவருக்கு நடத்தப்படும் ‘சர்வ மத மகாருத்ர அபிஷேகம்’ என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ருத்ர மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இந்த அபிஷேகத்தை செய்வதால் ‘ருத்ராபிஷேகம்’ என்று அழைக்கின்றனர். இந்த அபிஷேகத்தை அனைத்து மதத்தினரும் செய்யலாம். ஜாதி, மத பேதங்கள் இல்லாமல் கோகர்ண நாதேஸ்வரரை அனைவரும் வழிபடலாம். இந்த அபிஷேகத்தை செய்வதன் மூலம் நோய்கள் நீங்கி, எதிரி பயம் இல்லாமல் வாழலாம் என்பது நம்பிக்கை.
தல வரலாறு
தெற்கு கர்நாடகாவின் ஒரு சிறிய ப...