Tuesday, September 24
Uncategorized

கண்களைச் சுற்றியிருக்கும் சுருக்கம் மற்றும் கருவளையத்தை நீக்குவது எப்படி

25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்குகிறோம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவலாம்.  மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் செய்து கொடுக்கலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி அமைந்துவிடும். சுருக்கம் நீங்க: சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிங் கிரீம் அல்லது பாதாம் ஆயில் பயன்படுத்தலாம். மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம்.  தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும் அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்து வந்தால் கண்களின் கீழ் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும். கருவளையம் இன்றைய உலகில் உள்ள பெண்கள், ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம்....
Uncategorized

ஸ்ரீ பைரவருக்கு பவுர்ணமிக்கு என்ன தொடர்பு.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கி...
Uncategorized

பல்லி உடலில் எங்கு விழுந்தால் என்னென்ன பலன்கள்.

நம் நாட்டில் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளது. காக்கை நம் வீட்டின் முன் அமர்ந்து சத்தம் போட்டால் உறவினர்கள் வருவார்கள் .காக்கைக்கு உணவு வைப்பதும் நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம் இது போன்ற பல சாஸ்திர விதிமுறைகளை கடைப்பிடிக்கிறோம்.    அதுபோல் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்து பலன்களை நம் முன்னோர்கள் கணித்து வைத்து கூறியிருக்கிறார்கள். அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய தான் இந்த பல்லி நம் மீது பத்து இடங்களில் விழுவதால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.   பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள்   தலையில் விழுந்தால்...   பல்லி தலையில் விழுந்தால் அவருக்கு வர இருக்கும் கெட்ட நேரத்தை அது குறிக்கிறது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையை நாம் அனுசரித்து போவது மிகவும் நல்லது.    அதுபோல பல்லி தலையில் விழுவதால் கடும் எதிர்ப்பு...
Uncategorized

தொப்பையை குறைக்க பிளக்க டீ

மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது .இந்த தேனீரில் க்ரீன் டீ,பிளாக் டீ போன்ற பல வகைகள் உள்ளது.  இதில் பிளாக் டீயை தொடர்ந்து பருகி வருபவர்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும். ரசாயனங்கள் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் நிறம் மாறுதல் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவற்றை தடுப்பதில் மிக சிறப்பாக செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.  அது மட்டுமல்ல உடல் பருமனை குறைக்கவும், தொப்பை அதிகமாக இருப்பதை குறைக்க இந்த  டீயை குடித்தாலே போதும் என்று கூறுகிறார்கள்.  இந்த ப்ளாக் டீயை நீங்கள் தொடர்ந்து குடிப்பதால் தலை முடி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும்.  ரத்தத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகளவு இருப்பது அவசியம். பிளாக் டீ அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தி அதிகரிக்கும்.  மேலும் தலைமுடி உதிர்வைத் தடுக்கிறது. கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்ப...
Uncategorized

கேரளா பருப்பு குழம்பு

புரோட்டின் சத்து உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று எந்த சத்து இருந்தால் தான் உடல் நன்கு வளர்ச்சி அடையும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட புரோட்டின் சத்து நிறைந்த கேரள பருப்பு குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு 1/2 கப் சின்ன வெங்காயம்  5 (நறுக்கியது) மஞ்சள் தூள்  1/4 டீஸ்பூன் தண்ணீர்  தேவையான அளவி நெய்  1 டீஸ்பூன் உப்பு  தேவையான அளவு  அரைப்பதற்கு துருவிய தேங்காய்  1/4 கப் பச்சை மிளகாய்  1 சீரகம்  1/4 டீஸ்பூன்  தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய்  2 டீஸ்பூன் கடுகு   1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை  சிறிது வரமிளகாய்  1  செய்முறை:  முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து 2 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனது...
Uncategorized

சர்க்கரை நோய் நீங்க சென்று வணங்க வேண்டிய திருக்கோயில்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சென்று வணங்கவேண்டிய திருக்கோயில் அருள் மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில் ஆகும் .  இந்த திருக்கோயில்  திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் தாலுக்காவில்  கோவில்வெண்ணி என்ற ஊரில் அமைந்துள்ளது .  முற்காலத்தில் இந்த தலம் முழுவதும் கரும்பு காடுகளால் சூழப்பட்டிருந்தது . ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்ட போது இத்தலம் வந்தனர் .  அப்பொழுது இந்த கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி கண்டு தொழுதனர் . அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும் மற்றொருவர் வெண்ணி என்று அழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர் .  இறைவன் அசரீரியாக தோன்றி தனது பெயரில் கரும்பும் தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும் என்றருளினார் . அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் .  பிரார்த்தனை :  சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும் ரவ...
Uncategorized

சரும பராமரிப்பில் வால்நட் எண்ணெயின் முக்கியத்துவம்.

வால்நட் பருப்பில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல் சத்துகள் நிறைந்து உள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் கே சத்து நிறைந்துள்ளது. இதில் சோடியம், துத்தநாகம்,  நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளது. மேலும் செம்பு, ட்ரிப்டோபான் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் செல்லும் போது மூளை செல்கள் புத்துணர்வு பெற்று நன்கு செயலாற்ற மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. வால்நட் பருப்பில் இருக்கக் கூடிய இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உடலை பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் நுண்ணுயிரிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு.  உடலுக்கு தேவையான அளவு புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. புரோட்டின் நிறைந்த இந்த எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தினால் அற்புதமான பலன்களை ...
Uncategorized

கண்பார்வை குறைபாட்டை சரிசெய்யும் திருவாரூர்தூவாய்நாதர் கோயில்

ஒரு முறை சுந்தரர் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம், ”நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்" என்று உறுதி மொழி கொடுத்தார். திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், “இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்" என்றருளினார். சுந்தரரும் அதன...
Uncategorized

நெல்லிக்காய் துவையல்

நீண்ட நாள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக உயிர் வாழ நெல்லிக்கனியை உண்பது மிகவும் அவசியமானது எந்த நெல்லிக்கனியை தான் அதியமான் அவ்வைக்கு வழங்கியதாக வரலாறு கூறுகிறது அப்படிப்பட்ட எந்த நெல்லிக்கனியில் என்ன சத்துக்கள் உள்ளது என்று பாருங்கள். நெல்லியில் உள்ள சத்துக்கள் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளது. வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட். காலிக் அமிலமும் பாலிபீனாலும், 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து, நார் சத்து,கரோடினும் உள்ளது. நெல்லிக்காய் துவையல் செய்ய தேவையானவை:  பெரிய நெல்லிக்காய் - 6, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவ...
Uncategorized

Xoxo காதலர் தின வரலாறு.

புத்தாண்டுக்கு அடுத்து சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது காதலர் தினம் தான். பூக்கள், பரிசுகள், முத்தங்கள் தாண்டி காதலர் தினம் உருவான சோக வரலாறு தெரியுமா? ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை விட்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி முதல் காதல் மடல்:இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டு...
Exit mobile version