Uncategorized
நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை வைத்திய குறிப்புகள்.
உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.
துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. எனவே துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும். சுவாச சம்பந்தமான நோய்களிலிருந்து குறிப்பாக சளியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால் முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும். அதுபோல் வெண்ணையை உண்டு வந்தால் வாய்ப்புண் ஆறும்.
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர் மோர் இளநீர் அதிகம் உட்கொள்வது நல்லது. இ...