வரலட்சுமி வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டமா..? பலரும் அறியாத தகவல்கள்…!
இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமான போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருக்கு வெகு காலங்களாகவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது.
ஆனால் சரத்குமாருக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை தன்னுடைய மகள் சாதாரணமான ஒரு வாழ்க்கையை தான் வாழ வேண்டும் அவர் நடிகையாக கூடாது என்பதில் சரத்குமார் உறுதியாக இருந்தார். இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு இருந்த ஆசை காரணமாக அவரே தன்னிச்சையாக முயற்சி செய்து போடா போடி திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார்.
முதல் பட வாய்ப்பு:
அந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் வரலட்சுமி சரத்குமார் அந்த திரைப்படமும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் வரலட்சுமி சரத்குமார்.
&nbs...