காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்.. எல்லாத்துக்கு பிரபு தான் காரணம்.. அவருதான் ஆரம்பிச்சாரு.. குஷ்பூ தடாலடி..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை குஷ்பூ தமிழ் திரை உலகில் வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ரஜினி, கமல், சரத்குமார் என பல நடிகர்களோடு நடித்து தனக்கு என்று ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார்.
காசுக்காக அப்பா இதை செய்ய சொன்னார்..
திரை உலக வரலாற்றிலேயே ஒரு நடிகைக்கு கோயில் கட்டி ரசிகர்கள் சிறப்பித்தார்கள் என்றால் அது நடிகை குஷ்பூவுக்கு தான் என்று சொல்ல வேண்டும். அந்த அளவு குஷ்புவின் மீது தீவிர பிரியர்களாகவே ரசிகர்கள் இருந்தார்கள்.
இன்று வரை எவர்கீன் நடிகையாக திரை உலகில் பன்முக திறமையை காட்டி மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைந்திருக்கும் நடிகை குஷ்பூ நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.
இவர் பெரிய திரை மட்டுமல்லாமல...