48 வயதில் திருமணம்.. 2 வயசில் குழந்தை.. சபதமிட்டு தீர்த்துகட்டப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.. இவர் யார் என தெரியுமா..?
தமிழக பகுஜன் சமாஜத்தை சேர்ந்த கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னையில் இரவு வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து முடிந்ததை அடுத்து தமிழகம் எங்கும் கடுமையான அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இது போல சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு வகையான நடவடிக்கைகள் இந்நாளில் அதிகரித்து வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
48 வயதில் திருமணம் இரண்டு வயதில் குழந்தை..
சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி தெருவை சேர்ந்த வழக்கறிஞரான பகுஜன் சமாஜக் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 52 வயது நிரம்பியவர்.
இவர் இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு அருகே நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த போது இரு சக்கர வாகனங்களில் வந்த சில மர்ம ஆசாமிகள் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது நண்பர்களை சுற்றி வளைத்து எதிர்பா...