என் வாழ்க்கையில் பேய் தான் வந்து விளக்கு ஏத்துச்சு.. விஜய் சேதுபதி உருக்கம்..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்து தன் படிப்பை விருதுநகரிலும், சென்னையிலும் மேற்கொண்ட நடிகர் விஜய சேதுபதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த திரைப்பட நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் விளங்குபவர்.
இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்றதை அடுத்து மூன்றாண்டு காலம் துபாயில் கணக்காளராக பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து 2003-இல் இந்தியாவிற்கு திரும்பி வந்த இவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டார்.
நடிகர் விஜய் சேதுபதி..
இதனை அடுத்து கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு நடிகர்களை அருகில் இருந்து கவனித்து வந்த இவருக்கு பெண் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த நாளைய இய...