உக்காந்து பேசிட்டு இருக்கும் போதே இதை பண்ணுவார்.. கேப்டன் மறுபக்கத்தை உடைத்த நடிகை சீதா..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் பற்றி அனைவருக்கும் நினைவில் இருக்கும். கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மதுரை மாவட்டத்தில் இருந்து சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தவர்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த இவரின் இயற்பெயர் விஜயராஜ் என்பதாகும். இவர் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்த்..
கலியுக கர்ணனாக வர்ணிக்கப்படும் விஜயகாந்த் பசி என்று வருபவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் உணவினை அள்ளிக் கொடுத்த வள்ளலாக திகழ்கிறார். இவர் 1984 ஆம் ஆண்டு வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
மேலும் இவரது நடிப்பில் வெளி வந்த அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, சின்ன கவுண்டர், ஹானஸ்ட்...