மோசமான சண்டை.. பிரிந்து விட முடிவு செய்த ஸ்ரீஜா சொன்ன வார்த்தை.. செந்திலின் பதில்..!
ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை தொடங்கி மிர்ச்சி செந்தில் என தனக்கான ஒரு அடையாளப் பெயரை ஏற்படுத்திக் கொண்டவர்தான் செந்தில்குமார்.
இவர் முதன் முதலில் ரேடியோ மிர்ச்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கினார். அதில் இவர் இரவு நேரத்தில் சொல்லும் கதைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இப்போதும் இருக்கிறார்கள்.
மிர்ச்சி செந்தில்:
இருந்தாலும் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்ததுதான்.
இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான ஸ்ரீஜா நடித்திருந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே முகஜாடையில் இருப்பதால் Made for Each Other போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி அவர்களை வர்ணித்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடித்த போது ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகி காதலிக்க ஆரம்பித்தார்கள் .
அதன் ப...