20 வயசுலேயே அதுக்கு கூப்டாங்க.. பேராண்மை பட நடிகை சரண்யா ஓப்பன் டாக்..!
1998 இல் வெளியான காதல் கவிதை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா நக். அதன் பிறகு நீ வருவாய் என திரைப்படத்திலும் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் முதன் முதலாக நடிகர் பரத் நடித்த காதல் திரைப்படத்தில்தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகியின் தோழியாக இவர் நடித்திருப்பார். காதல் திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு நல்ல வகையில் வரவேற்பு கிடைத்தது.
தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு:
அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவருக்கு அடையாளமாக அமைந்த மற்றொரு திரைப்படம் என்றால் பேராண்மை திரைப்படத்தை கூறலாம். பேராண்மை திரைப்படம் ஒரு க்ரைம் அட்வெஞ்சர் திரைப்படமாக இருந்தது. இதில் வரும் நான்கு மாணவிகளில் அஜிதா என்னும் மாணவியாக இவர் நடித்திருப்பார்.
அதற...