ஆடை குறித்து எழுந்த விமர்சனம்.. புன்னகையரசி சினேகா எடுத்த அதிரடி முடிவு..!
சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைளுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கும். அதாவது அவர்கள் தன்னைத்தானே முன்னிலைப்படுத்தி கொள்வார்கள். தன்னை மையப்படுத்தி தான் இந்த உலகமே இயங்குவதாக கற்பனையாக நம்புவார்கள்.
இந்த உலகத்தில் அவர்கள் எது செய்தாலும் அவர்களை இந்த உலகமே உற்று நோக்கும், எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும் என்ற ஒரு புகழ் மயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
சில நடிகர், நடிகைகளுக்கு இது போன்ற ஒரு மோசமான ஒரு உணர்வு இருந்து வருகிறது.
அதாவது அவர்களைப் பொறுத்தவரை அவர்கள்தான் மக்களால் எப்போதும் கவனிக்கப்பட வேண்டியவர்களாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் செய்கிற மிக சாதாரண விஷயங்களை கூட சரித்திர சம்பவங்களாக பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
சினேகா
நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று வர்ணிக்கப்படும் ஒரு அழகான நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்க...