“திருமணதிற்கு முன்பே பெண்கள் கன்னித்தன்மை இழப்பது..” யாஷிகா ஆனந்தை விளாசும் ரசிகர்கள்..!
சினிமா நடிகைகள் என்றாலே ஏதேனும் சர்ச்சையான கருத்துகளை பேசுவது என்பது இப்போது வாடிக்கையாகி விட்டது.
அதுவும் மற்றவர் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இதுபோன்று சர்ச்சையான விஷயங்களை பேசுவதால் ரசிகர் மத்தியில் நமக்கான கவனம் அதிகரிக்கும் என்பதாலேயே இவர்கள் இது போன்ற விஷயங்களை தேர்வு செய்து பேசுகிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
அந்தரங்க விஷயங்கள்
ஏனெனில் கற்பு, ஒழுக்கம், அந்தரங்க விஷயங்களை இவர்கள் அடிக்கடி பொதுவெளிகளில் பேசி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக நடிகை குஷ்பு ஒருமுறை கற்பு குறித்து பேசி பயங்கரமாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
அதாவது பெண்களுக்கு கற்பு என்பது அவ்வளவு பெரிய விஷயமில்லை என்பது போல் அவர் கருத்து தெரிவித்திருந்தது, பெரும்பாலான மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் நடிகை சுகாசினியும் கற்பு குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டு, அவரும் பொதுமக்கள...