அந்த இடத்தில் என் வருங்கால கணவர் செய்த வேலை.. வரலட்சுமி சொன்னதை கேட்டீங்களா..?
தமிழ் சினிமாவில் தைரியமான மிகவும் திறமைசாலியான நடிகையாக பார்க்கப்படுபவர் தான் வரலட்சுமி சரத்குமார்.
இவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியும் ஆன சரத்குமாரின் மகள் என்பதால் வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறார்.
வரலக்ஷ்மி சரத்குமார்:
அறிமுகமானது என்னவோ அப்பா சரத்குமாரின் சிபாரிசின் பெயரில்தான் என்றாலும் கூட அவர் தனது திறமையால் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
சரத்குமார் எவ்வளவோ வேண்டாம் என எதிர்த்த போதும் அவர் நடிகையாக வேண்டும் என்ற தனக்குள் இருந்த ஆசையை தனது அப்பாவிடம் சொல்லி அதற்கான அனுமதி வாங்கி தான் நடிக்கவே வந்தார்.
அதற்காக வரலட்சுமி தாயார் சாயா மற்றும் ராதிகா உள்ளிட்டோர் சரத்குமாரிடம் அனுமதி கேட்டு வரலட்சுமியை நடிக்க அனுமதியுங்கள் என கேட்ட பின்னரே அவர் அனுமதித்ததாக பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
போடா போடி திரைப்படத்தின் மூலமாக 2012 ஆம் ஆண்டு சிம்புவு...