மகளின் நிச்சயதார்த்தம் நடந்த சமயத்தில் நடிகர் முரளி இறந்ததற்கு காரணம் யார் தெரியுமா..?
கர்நாடகாவில் இருக்கும் பெங்களூருவை சேர்ந்த நடிகர் முரளி தமிழ் திரைப்படங்களில் ஆறுவதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காதல் மன்னனாக திகழ்ந்தார். காதல் திரைப்படங்களுக்கு இலக்கணம் வகுத்த பெருமை நடிகர் முரளியை சாரும்.
அந்த வகையில் நடிகை முரளி 1984-இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 1990-இல் வெளி வந்த புது வசந்தம் திரைப்படம் இவர் வாழ்க்கையில் வசந்தத்தை சேர்த்தது.
மகளின் நிச்சயதார்த்தம்..
இந்தப் படத்தின் மூலம் நல்ல பேமஸை அடைந்த நடிகர் முரளி 1991-ஆம் ஆண்டு நடித்த இதயம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் முன்னணி நாயகனாக உயர்ந்தார்.
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த கடல் பூக்கள் திரைப்படத்தில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இவரது தந்தை சித்தலிங்கய்யா கன்னடத்தில் சில படங்...