நகுல் எங்கிட்ட இதுவரைக்கு பேசமா இருக்க காரணம் இது தான்.. ராஜகுமாரன் வேதனை..!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜகுமாரன் நடிகை தேவயானியை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி நடிக்க வைத்தார். முதன் முதலில் அவர் சூரியவம்சம் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியபோது தேவயானியின் மீது அவருக்கு காதல் மலர்ந்தது.
தேவயானி மீது மலர்ந்த காதல்:
அதன் பிறகு தேவயானி மீது ஒரு நல்ல ஈர்ப்பு இருக்கவே தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் தேவயானியை நடிக்க வைத்தார்.
இதனிடையே தேவயானிக்கும் ராஜகுமாரனின் நல்ல குணமும் அவரது மனமும் பிடித்து போக அவரும் அவர் மீது காதலில் விழ ஆரம்பித்தார்.
இப்படி அவர்கள் காதல் சென்று கொண்டிருக்க ஒருநாள் திடீரென அவர்கள் வீட்டிற்கு தெரியவந்தது.
ஆனால் தேவியானின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கும் இந்த காதலுக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதையும் மீறி தேவயானி தனது காதல...