குடிப்பழக்கத்தால் நடுத்தெருவிற்கு வந்த 5 தமிழ் நடிகைகள்… வாழ்க்கையே போச்சு.!
மது பழக்கம் என்பது எப்பொழுதுமே உயிருக்கு கேடான ஒரு விஷயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக பலரையும் பின்னடைய செய்து விடுகிறது. மது பழக்கம் என்பது ஏழை எளியவர்களில் துவங்கி பணக்காரர்கள் வரை அனைவரிடமும் ஒரு வியாதி போல பரவி இருக்கும் விஷயமாக இருக்கிறது.
அனுதினமும் ஏழைகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த மது பணக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக நடிகைகள் பலர் இதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கின்றனர். அப்படியான சில நடிகைகளை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்
சாவித்திரி
நடிகை சாவித்திரி தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் மகாநதி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். எப்படி நடிகர்களில் சிவாஜி கணேசன் சிறந்த நடிகராக அறியப்படுகிறாரோ அதேபோல நடிகைகளில் சிறந்தவராக சாவித்திரி அறியப்பட்டார்.
அப்படி எல்லாம் இருந்தும் கூட சொந்த தய...