தேவயானியின் வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!
ஒரு நடிகையின் எதிர்கால வாழ்க்கை என்பது எப்படி வேண்டுமானாலும் மாறிப்போகலாம். தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகைகள் புகழின் உச்சியில் இருந்துவிட்டு, ஒரு காலகட்டத்துக்கு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு காணாமல் போயிருக்கின்றனர். இதில் நடிகர்களும் விதிவிலக்கல்ல.
ஆனால் ஒரு சில நடிகைகள் சினிமாவை விட நிஜ வாழ்க்கையை மிக அற்புதமாக அமைத்துக்கொள்கின்றனர். வாழ்க்கையை உணர்வு பூர்வமாக அழுத்தமாக வாழ்கின்றனர்.
தேவயானி
நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நின்றவர். கடந்த 1990களில் இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
குறிப்பாக காதல் கோட்டை, சூரிய வம்சம், தெனாலி, கும்மிப்பாட்டு, தென்காசிப்பட்டணம், நினைத்தேன் வந்தாய், ஆனந்தம், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம...