பீரியட்ஸ் நேரத்துல தான் அதை பண்ணேன்.. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!
தமிழில் இப்போது முன்னணி நாயகிகளில் ஒருவராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்து வருகிறார்.
சாய் பல்லவி
கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை சாய்பல்லவி. இவரது முதல் படம் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம். இதில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறினார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த சாய்பல்லவியின் சொந்த ஊர் நீலகிரியை அடுத்துள்ள கோத்தகிரி. சார்ஜியாவில் மருத்துவம் படித்த சாய்பல்லவி, இப்போது கோவையில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் கொண்ட சிகிச்சை வசதிகள் அடங்கிய மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறார்.
நடனத்தில் ஆர்வம்
சாய்பல்லவி நடிப்பில், படிப்பில் எவ்வளவு ஆர்வம் கொண்டவரோ அதே அளவுக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். பிரேமம் படத்த...