“குஷ்பூவின் பேச்சுக்கு சூடு வைத்த அன்பே சிவம் இயக்குனர் சுந்தர் சி..” அந்த மனசு தான் கடவுள்..!
நடிகை குஷ்பூ சமீபத்தில் நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இவை அனைத்திற்கும் அழகாக பதில் கொடுத்து வந்தார் நடிகை குஷ்பூ. ஆனால், அவர் கொடுத்த ஒரே ஒரு பதில் மட்டும் ரசிகர்களை உறுத்தியது. அது என்னவென்றால் உங்களுக்கு பிடித்த ரொமாண்டிக்கான ஹீரோ என்றால் யார்..? என்று நடிகர் அரவிந்த்சாமி, நவரச நாயகன் கார்த்திக், நடிகரும் குஷ்பூவின் கணவருமான சுந்தர் சி ஆகிய மூவரின் புகைப்படங்களை காட்டினார் சுஹாசினி.
சுந்தர் சி
இதனை பார்த்த நடிகை குஷ்பூ கண்டிப்பாக சுந்தர் சி-ஐ தான் கூறுவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதற்கு மாறாக நடிகை குஷ்பூ நவரச நாயகன் கார்த்திக் தான் எனக்கு பிடித்த ரொமாண்டிக்கான ஹீரோ என்று ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட்டார். என்னடா இது. அந்த ஆப்ஷனில் கணவர் இருக்கிறார்.. அதை விட்டுவிட்டு நவரச...