தனுஷ் கூட நடிக்க மாட்டேன் என சொன்னதுக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சரண்யா பொன்வண்ணன்..!
நடிகை சரண்யா, கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில்தான் முதலில் அறிமுகமானார்.
பிரபுவுடன் அவர் நடித்த மனசுக்குள் மத்தாப்பூ படம், நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கருத்தம்மா படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், இயக்குநர் பொன்வண்ணனை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.
சரண்யா பொன்வண்ணன்
ஒரு கட்டத்துக்கு பிறகு, அழகான அம்மா கேரக்டரில் நடிக்க நடிகை சரண்யா பொன்வண்ணன் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் அழைத்து வந்து விட்டனர்.
இதையடுத்து விஜய், அஜீத்குமார், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், பரத், சசிக்குமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களுக்கு அம்மாவாக பல படங்களில் நடித்தார் சரண்யா பொன்வண்ணன்.
தென்மேற்கு ப...