ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. இது எதுக்குன்னு தெரியல.. இயக்குனர் நெல்சன் பரபரப்பு பேச்சு..!
கடந்த மாதம் ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை எடுத்து வருகிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு...
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொண்ணை பாலு, பெண் தாதா மலர் கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை ஹரிதரன் உள்ளடோர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அ...