VJ பிரியங்காவின் சிரிப்பில் மறைந்திருக்கும் கஷ்டங்கள்..!
விஜய் தொலைக்காட்சியில் இவர் இல்லாமல் நிகழ்ச்சிகளை இல்லை என்று சொல்லக் கூடிய வகையில் மிகச்சிறந்த தொகுப்பாளினியாக இருக்கும் VJ பிரியங்கா தேஷ் பாண்டே முதல் முதலாக ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரியானார்.
இதனை அடுத்து இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவரை ரசிகர்களின் மத்தியில் கொண்டு சென்றது. மேலும் இவர் ஸ்டார்ட் மியூசிக், தி வாள் போன்ற நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் சென்னைக்கு குடியேறிய இவர் எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது இவரது தோழி இவருக்கு ஆங்கரிங் வாய்ப்பை ஒரு மாதத்திற்கு விட்டு தந்திருக்கிறார். இதனை அடுத்து முதலாக ஜீ தமிழில் அழகிய பெண்களே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
மேலும் வெறும் 600 ர...