என் காசுல சீட்டு விளையாடுவான்.. ஆனா, என் புள்ளைக்கு.. வடிவேலுவின் மறுபக்கத்தை காட்டிய கஞ்சா கருப்பு..!
நடிகர் கஞ்சா கருப்பு வெள்ளந்தியான மனிதர் என்பது அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தாலே, எதிரில் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடும். சினிமாவை போலவே, நிஜத்திலும் அவர் அப்பாவியாக தான் இருந்திருக்கிறார் என்பதை பல விஷயங்களை கூறும்போது வெளிப்படையாகவே தெரிகிறது.
பிதாமகன் படத்தில் கஞ்சா கொடுக்கிய சில காட்சிகளில் வருவார். சிம்ரனிடம், சிங்கப்பூர் துபாய் போய்ன்னு போய் கண்ட பயலுக முன்னாடி ஆடறே, நம்ம தாய்புள்ள சொந்தங்கள் முன்னாடி ஆட மாட்டியா, என அழுதபடி கேட்பார். அடுத்து பருத்திவீரன், ராம் படங்களின் வாயிலாக கஞ்சா கருப்புவின் வாழ்க்கை தரத்தை வேற லெவலில் மாற்றிவிட்டார் இயக்குநர் அமீர். இந்த படங்களில் கஞ்சா கருப்பு காமெடி தரமான சம்பவமாக இருக்கும்.
நடிகர் வடிவேலு குறித்து சர்ச்சைகளும், விமர்சனங்களும் சமீபமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் குறித்து தரக்குறைவாக விமர்சித்த காலகட்டத்த...