நடிகை ரேவதி வாழ்க்கையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சொல்ல மறந்த கதை..!
தமிழ் சினிமாவில் 1980களில் மிக முக்கிய முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவரது தந்தை இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஆக பணிபுரிந்தவர். தாய் இல்லத்தரசி. ரேவதியின் இயற்பெயர் ஆஷா.
பாரதிராஜா இயக்கிய மண்வாசனை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரேவதி தொடர்ந்து புன்னகை மன்னன். வைதேகி காத்திருந்தாள், உன் கண்ணில் நீர் வடிந்தால், புதிய முகம், உதயகீதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 1987ம் ஆண்டில், சுரேஷ் சந்திர மேனன் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. ஆனால் சுரேஷ் சந்திர மேனன், திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்தும் ரேவதியை தொடர்ந்து நடிக்க அனுமதிக்கவில்லை. இருவரும் ஒன்றாக சேர்ந்து 27 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதற்கு குழந்தையின்மை காரணம் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பே ப...