Tuesday, September 24
களவாணி சினிமா பாணியில மருத்துவமனைக்குள்ள புகுந்து காதலியை அலேக்கா தூக்கி சென்ற நடிகர் விமல்..!
Tamil Cinema News

களவாணி சினிமா பாணியில மருத்துவமனைக்குள்ள புகுந்து காதலியை அலேக்கா தூக்கி சென்ற நடிகர் விமல்..!

தமிழ் திரையுலகில் எண்ணற்ற நடிகர்கள் நடித்து வருவதோடு சிலர் நடிக்க வந்த சில நாட்களிலேயே எங்கே என்று கேட்கக் கூடிய அளவு காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான நடிகர் விமல் தனது எதார்த்த நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தினார். இந்த காரணத்தால் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் எத்தன், வாகை சூடவா, தூங்கா நகரம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவர் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படத்தில் அனைவரையும் கலகலக்க வைத்தவர். சற்குணம் இயக்கத்தில் வெளி வந்த களவாணி படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய இவர் பாண்டியராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் காமெடியில் கலக்கியவர். இதனை அடுத்து வித்தியாசமான கெட்டப்பில் மஞ்சள்...
16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டரா இது? – ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..!
Tamil Cinema News

16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டரா இது? – ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்..!

தமிழ் திரையுலகில் என்றுமே தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளி வந்த 16 வயதினிலே படம் உங்களுக்கு நினைவு இருக்கிறதா? கண்டிப்பாக இந்த படம் 80,90 கால மக்களின் மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படத்தில் கமலஹாசனோடு இணைந்து ஸ்ரீதேவி சிறப்பான நடிப்பை வெளியிட்டதை அடுத்து இந்த படம் பெரும் வெற்றியை இருவருக்குமே பெற்றுத் தந்தது. இதனை அடுத்து மேலும்  பட வாய்ப்புகள் இவர்கள் இருவருக்குமே வந்து சேர்ந்தது. இந்த படத்தில் மயிலு கேரக்டரில் நடித்த ஸ்ரீதேவியின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது. அத்தோடு அந்தப் படத்தில் நடித்த டாக்டர் கேரக்டரை யாரும் எளிதில் மறக்க முடியாது இந்த கேரக்டரை செய்த நடிகரின் பெயர் சத்யஜித். 1977 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படத்தை பார்த்து அனைவரும் வியந்ததோடு இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் டாக்டராக நடித்த சத்யஜித் தமிழ்...
ஆசை ஆசையாய் முத்த நடிகரை காதலித்த டான்ஸ் நடிகை.. கடைசியில் நடந்த கொடுமை..!
Gossips Corner

ஆசை ஆசையாய் முத்த நடிகரை காதலித்த டான்ஸ் நடிகை.. கடைசியில் நடந்த கொடுமை..!

வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் ஆசைப்பட வேண்டும் என்று சத்குரு கூறியிருக்கிறார். ஆனால் எப்படிப்பட்ட ஆசையை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வரையறை உள்ளது என்பதை மறந்து முத்த நடிகர் ஒருவரை உயிருக்கு உயிராய் காதலித்து ஏமாந்து போன டான்ஸ் நடிகையின் பதிவு பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். அது முற்றிலும் உண்மையானது தான். எதையும் முன் யோசித்துப் பார்க்காமல் மூத்த நடிகரை தன் உயிருக்கு உயிராக நினைத்து அவர் எடுத்த படத்தில் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த இந்த நடிகையின் நிலை தற்போது பரிதாபகரமாக மாறிவிட்டது. வடநாட்டைச் சேர்ந்த இந்த நடிகை தனது நடிப்பை விட நடனத்தால் அனைவரையும் கிறங்க வைத்தவர். குறிப்பாக இவரது இடுப்பழத்தில் கிறங்கிய தமிழ் ரசிகர்கள் இன்னும் அந்த இடுப்பழகியின் நினைவில் இருக்கிறார்கள் என்றால் பாருங்களேன். இந்த நடிகையின் இடு...
நடிகர் சங்கத்திற்காக கேப்டன் செய்த சம்பவம்.. ஆனால், இறுதி சடங்கில் நடிகர் சங்கம் செய்த துரோகம்..!
Tamil Cinema News

நடிகர் சங்கத்திற்காக கேப்டன் செய்த சம்பவம்.. ஆனால், இறுதி சடங்கில் நடிகர் சங்கம் செய்த துரோகம்..!

ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது அவர் அருமை தெரியாது என்று கூறுவார்கள். அது போல கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது தெரியாத பல விஷயங்கள் அவர் மரணத்திற்கு பின்பு அடுக்கடுக்காக வெளி வந்து அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை அனைவருக்கும் உணர்த்திவிட்டது. கேப்டனை பற்றி அனைவரும் உள்ளதை உள்ளபடி பேசி வருகிறார்கள். பிரபலங்கள் முதல் சாமானியன் வரை நல்ல பெயரை பெற்ற மாமனிதனாய் கேப்டன் என்று விளங்குகிறார். சினிமா துறையில் கேப்டனாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் குறுகிய காலத்தில் அதிரடி வெற்றியை பெற்றவர் கேப்டன். எம்ஜிஆர் காலத்தில் நடிகர் சங்க கடனை கட்ட முடியாமல் திணறினார்கள். அதனை அடுத்து இந்த கருப்பு எம்.ஜி.ஆர் தான் நடிகர் சங்க கடனை அடைக்க கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். குறிப்பாக வெளிநாடுகளில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் திரை நட்சத்திரங்களை வைத்து இவர் நடத்திய கலை நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட...
பள்ளியில் படிக்கும் போதே அதை பண்ணிட்டேன்..!! கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்..!
Tamil Cinema News

பள்ளியில் படிக்கும் போதே அதை பண்ணிட்டேன்..!! கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்..!

மலையாளத் திரையுலகில் சிறு வயதிலேயே அறிமுகமாகி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, தமிழ் திரை உலகில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்ற லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நேர்த்தியான முறையில் நடித்திருப்பார். இவரது நடிப்பை முதல் படத்தில் பார்த்த ரசிகர்கள் அவர்களது மனதை பறி கொடுத்ததை அடுத்து கும்கி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் பிரபுவின் மகனாகிய விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த லட்சுமி மேனன் காட்டுவாசியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார் என்று சொல்வதை விட வாழ்ந்து காட்டினார். இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் நான் சிவப்பு மனிதன், பாண்டியநாடு போன்ற படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததை அடுத்து இவருக்கும் விஷாலுக்கும் கனெக்சன் என்ற கிசுகிசுக்கள் வெளி வந்தது. இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இரு மொழி படங்களில் த...
5 மனைவிகள்.. கெத்தான வாழ்க்கை.. நடிகர் எம்.ஆர்.ராதா கடைசியில் எப்படி இறந்தார் தெரியுமா..?
Tamil Cinema News

5 மனைவிகள்.. கெத்தான வாழ்க்கை.. நடிகர் எம்.ஆர்.ராதா கடைசியில் எப்படி இறந்தார் தெரியுமா..?

திரை உலகில் நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது கரகரப்பான குரலால் பேமஸான நடிகராக திகழ்ந்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் மேடைகளில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும், வில்லன் கேரக்டர்களிலும் அசத்தியவர். இவரின் நிஜ வாழ்க்கையில் இவருக்கு ஐந்து மனைவிகள் இருந்து இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால் அது உண்மைதான். இவர் இந்த ஐந்து மனைவிகளோடும் கெத்தாய் வாழ்ந்து காட்டியவர. எம்.ஆர்.ராதாவின் இயற்பெயர் மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதாகும். இதன் சுருக்கத்தை தான் எம்.ஆர்.ராதா என்று மாற்றிக் கொண்டார். எம்.ஆர்.ராதாவிற்கு தமிழரசன், எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராணி, செல்வராணி, ரதிகலா, ராதிகா, நிரோஷா, மோகன் ராதா எனும் பிள்ளைகள் இருந்தார்கள். இதில் எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, ராதிகா, நிரோஷா போன்ற பிள்ளைகள் திரைப்படத்துறையில் நடித்திருக்கிறார்கள். மேல...
எங்கே இருந்தாலும் நீ நல்லா இரு.. ஆனா.. இதுக்கு ஆசைப்படாதே கதறி அழுத சீதா.. பார்த்திபன் செய்த வேலை…!
Tamil Cinema News

எங்கே இருந்தாலும் நீ நல்லா இரு.. ஆனா.. இதுக்கு ஆசைப்படாதே கதறி அழுத சீதா.. பார்த்திபன் செய்த வேலை…!

எங்கிருந்தாலும் வாழ்க என்ற பாணியில் தற்போது பார்த்திபன் தனது முன்னாள் மனைவி சீதாவிற்கு தெரிவித்திருக்கும் செய்தியினை பலரும் ஆமோதித்திருக்கிறார்கள். தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் உச்சகட்ட நடிகையாக திகழ்ந்த சீதா புதிய பாதை என்ற படத்தில் இயக்குனர் பார்த்திபனோடு இணைந்து நடித்திருந்தார். அந்த சமயத்தில் தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தனது குடும்பத்தில் இருக்கும் நபர்களை பகைத்துக் கொண்டு பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். இருவரது வாழ்க்கையும் சிறப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் நடிகை சீதா பார்த்திபனுக்கும், நடிகை சௌந்தர்யாவிற்கும் இடையே கனெக்சன் உள்ளது என்ற ஒரு கட்டுக் கதையை கிளப்பிவிட்டார். மேலும் விமான விபத்தில் இறந்து போன அந்த நடிகை சௌந்தர்யாவை விரைவில் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளி வர வகை செய்தார். இதனை அடுத்து இருவர் இடையே கருத்து வேற்றுமைகள்...
கத்திரிக்காய் முத்தின கடைக்கு வந்து தானே ஆகணும்..! சோகத்தில் மூழ்கிய நேஷனல் கிரஷ் ஃபேன்ஸ்..!
Tamil Cinema News

கத்திரிக்காய் முத்தின கடைக்கு வந்து தானே ஆகணும்..! சோகத்தில் மூழ்கிய நேஷனல் கிரஷ் ஃபேன்ஸ்..!

நேஷனல் கிரஸ் நடிகையாக விளங்கும் ராஷ்மிகா மந்தானா மற்றும் விஜய தேவரகொண்டா பற்றி சமூக ஊடகங்களில் அதிக அளவு கிசுகிசுக்கள் வெளி வந்த வண்ணம் இருந்தது. அந்த கிசுகிசுக்களை உண்மையாக கூடிய வகையில் அவர்கள் வெளியிடுகின்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அவர்கள் டேட்டிங் சென்றதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இருந்ததை அடுத்து இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது போன்ற தகவல்கள் தாறுமாறாக இணையத்தை ஆக்கிரமித்தது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படத்தில் காட்டிய நெருக்கம் இவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி இந்த படத்தை வெற்றியடைய செய்ததோடு மட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் இவர்களுக்கு முகவரியை பெற்று தந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் பரவிய வேளையில், நாங்கள் காதலி...
நடிகர் ஜெய்க்கு கண்ணு வியர்க்க வைத்த 4 நடிகைகள் லிஸ்ட்..!! டேட்டிங் செய்து சோலிய முடித்த சேதி..!
Tamil Cinema News

நடிகர் ஜெய்க்கு கண்ணு வியர்க்க வைத்த 4 நடிகைகள் லிஸ்ட்..!! டேட்டிங் செய்து சோலிய முடித்த சேதி..!

தனது வித்தியாசமான சிரிப்பாலும், குரல் வளத்தாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜெய் பெண்கள் விஷயத்தில் வீக்கான ஆள் என்பதால் இவரது சினிமா கேரியர் திசை மாறி சென்று விட்டது என கூறலாம். திரைத்துறையில் சாதிப்பதற்காக பல இளைஞர்களும் ஆவலோடு போராடி வரக்கூடிய காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளாமல் முன்னணி நடிகராக மாறக்கூடிய வாய்ப்பை பெற்றிருந்தும் கிசுகிசுக்களில் அதிக அளவு பேசப்பட்ட நடிகராக மாறி தன்னுடைய திரை வாழ்க்கையை தொலைத்து விட்டார். இந்த காரணத்தால் தான் இவருக்கு பட வாய்ப்புகள் பறி போனதோடு நடிப்பில் கவனத்தை செலுத்த முடியாமல் மனம் போன போக்கில் சென்று இருக்கிறார். எனினும் தற்போது அதிலிருந்து வெளியே வந்து நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவர் திரை உலகில் தடுமாறி சென்றதற்கு காரணமாக நான்கு நடிகைகளை கூறலாம். அந்த நான்கு நடிகைகளும் இவரோடு கொண்ட தொடர்பால் அவர்கள...
விஷால் உதயநிதி இடையே என்ன பிரச்சனை தெரியுமா..? இதனால் தான் கலைஞர்100 நிகழ்ச்சிக்கு வரலயாம்..!
Tamil Cinema News

விஷால் உதயநிதி இடையே என்ன பிரச்சனை தெரியுமா..? இதனால் தான் கலைஞர்100 நிகழ்ச்சிக்கு வரலயாம்..!

செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமான நடிகர் விஷால்.இவர் நடித்த படங்கள் ஆரம்ப காலத்தில் நல்ல வெற்றியை கொடுத்தது. இதனை அடுத்து சறுக்கல்களை சந்திக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் திணறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் இவர் நடிப்பில் வெளி வந்த மார்க் ஆண்டனி படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படமானது அதிகளவு வசூலை ஈட்டியது என கூறலாம். இதனை அடுத்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் மாஸ் வெற்றியை இவருக்கு கொடுக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள். இதற்கு காரணம் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. உங்களுக்கு நன்றாகவே தெரியும் நடிகர் விஷாலும், உதயநிதி ஸ்டாலினும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ...
Exit mobile version