“உன்னை கட்டிக்கப்போறவன் குடுத்து வச்சவன்..” குஷ்பூவிடம் நேரடியாக கூறிய முன்னணி நடிகர்..!
கொண்டையில் தாழம்பூ கூடையில் என்ன பூ.. குஷ்பூ.. என்ற பாடல் எல்லோர் மனதிலும் ஒரு காலகட்டத்தில் முணுமுணுக்கப்பட்டது. அந்த அளவு குஷ்புவின் மீது கிரஷாக இருந்த ரசிகர்கள் அவர்களுக்காக கோயிலைக் கட்டி அசத்தினார்கள்.
தற்போது குஷ்பூ திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளில் தயாரிப்பாளராக, ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதியாக பன்முக திறமையை கொண்டிருக்கிறார். வளரும் இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் என்றும் திரை உலகில் நடித்து வரும் எவர்கிரீன் நடிகையாகவும் இருக்கிறார்.
சின்னத்தம்பி படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு விரும்பப்படக்கூடிய கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த குஷ்பூ தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
தொடர்ந்து இளைய திலகம் பிரபுவோடு இணைந்து பல படங்களில் நடித்த இவருக்கு பிரபுவோடு திருமணம் முடிந்து விட்டது, இருவரும் காதலிக்கிறார்கள் என்பது போன்ற கிசுகிசுக்க...