“தவறான உறவில் இருக்கார்.. வெளிய வந்துருச்சு..” – பிரபல நடிகரை விளாசிய நடிகை ஆல்யா மானசா..!
நடிகை ஆல்யா மானசா சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் குறித்தும்.. அவர் வெளியிடக்கூடிய தகவல்கள் குறித்தும்.. தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, பயில்வான் ரங்கநாதன் வெளியிடக்கூடிய தகவல்கள் என்னை பொறுத்தவரை தவறானது.
நான் சினிமா துறையில்.. மீடியா துறையில் இருக்கிறேன் என்பதற்காக சினிமா துறையினருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. பொதுவாக கூறுகிறேன். ஏனென்றால் சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா பணி இடங்களிலுமே இப்படியான அத்துமீறல்கள், தவறான தொடர்புகள், காதல்கள், ப்ரேக்-அப் என அனைத்துமே நடக்கிறது.
சினிமா துறையில் மட்டும்தான் இது நடக்கிறதா என்று கேட்டால்.. நிச்சயமாக கிடையாது. அனைத்து துறைகளிலுமே இது நடக்கிறது. அனைத்து துறைகளிலுமே பெண்களுக்கு எதிரான விஷயங்கள் நடக்கத்தான் செய்கிறது.
ஆனால், சினிமா துறையில் இருப்பவர்கள் ஏதாவது செய்து விட்டால் ...