ரெண்டு பேரும் ஒரே நாளில் மோதிக்கிட்டோம்.. அப்ப இருந்த வலி இப்ப சரியாயிடுச்சு.. கோப்ரா பட இயக்குனர் குறித்து பேசிய விக்ரம்!.
தமிழில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடுத்து வருபவர் நடிகர் விக்ரம் இருந்து வருகிறார். பெரும்பாலும் விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் புதிய புதிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார்.
இயக்குனர் பாலா இயக்கிய சேது படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் நிறைய மாற்றங்கள் இருந்தன. தொடர்ந்து அவர் நடித்த பிதாமகன் திரைப்படத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாகதான் நடித்திருந்தார் விக்ரம்.
சியான் விக்ரம்:
இதனாலேயே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். ஆனால் விக்ரம் நடிக்கும் எல்லா திரைப்படங்களும் பெரும் வெற்றி என்பது கிடைப்பது கிடையாது. பெரும்பாலும் அருள், சாமி மாதிரியான அவரது கமர்சியல் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வெற்றி இந்த மாதிரியான மாறுபட்ட கதைகளுக்கு கிடைப்பது கிடையாது.
அதை அவரே கூட நிறைய பேட்டிகளில் கூறி வருந்தி இருக...