யார் இந்த அஞ்சு அரவிந்த்..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!
சினிமாவில் சில நடிகைகள் ஒரு சில காலங்கள் மட்டுமே இருந்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் இருந்த ஒரு சில காலங்களிலேயே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றெடுப்பார்கள். பொதுவாக நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் ஃபீல்ட் அவுட் ஆவது என்பது சகஜமாக நடக்கும் விஷயம்தான்.
அதனால் ஒரு நடிகை சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார் என்றால் அதற்கு பிறகு அவருக்கு என்ன ஆனது என்று யாரும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படி சினிமாவில் இருந்த குறுகிய காலங்களிலேயே அதிக வரவேற்பு பெற்றவராக இருந்தவர் நடிகை அஞ்சு அரவிந்த்.
அஞ்சு அரவிந்த்:
மலையாளம், தமிழ், கன்னடம் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்தவர் அஞ்சு அரவிந்த். 1995 இல் தொடங்கி கிட்டத்தட்ட 2014 வரையிலுமே சினிமாவில் அவருக்கென்று ஒரு மார்க்கெட் இருந்து வந்தது. 1995ல் அக்ஷரம் என்கிற மலையாள திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார...