Tuesday, September 24
Uncategorized

“திருச்சி கோயிலில் வேலைவாய்ப்பு..!” – இந்து அறநிலையத்துறை அறிவிப்பு..!

வேலைவாய்ப்பு: திருச்சியில் உள்ள திருவானைக்காவல், அருள்மிகு ஜம்போகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுமார் 7 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் இந்து அறநிலையத்துறை அறிவிப்பை செய்துள்ளது. மேலும் இந்த வேலையை காண தகுதி உடையவர்களை நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்ய இருக்கிறார்கள். இந்தப் பணிகளுக்காக  விண்ணப்பிக்க விரும்புவர்கள் வரும் 11.05. 2023 மாலை வரை நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். இங்குள்ள காலி பணியிடங்கள் என்னவென்றால் தட்டச்சர் ஒன்று, உதவி மின் பொறியாளர் ஒன்று, காவலர் நான்கு, பெருக்குபவர் ஒன்று  இதற்கான கல்வி தகுதி தட்டச்சரை பொருத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு இணையான கல்வித் தகுதி இருக்க வேண்டும். மேலும் அரசு தொழில்நுட்ப தட்டச்ச தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமானதாகும்...
Uncategorized

“இரவில் தூங்காம இருந்தா இதய நோய்..!” – ஆபத்து ஏற்படுதா..!

சராசரியாக ஒவ்வொரு மனிதனும் தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியாக உறங்க வேண்டும். அப்படி உறங்கினால் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தூக்க இன்மை காரணமாக சிலருக்கு இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைக்கும் போது உங்கள் தசைகள் வலிக்க ஆரம்பித்து மூட்டுக்கள், எலும்புகளில் வீக்கம் ஏற்படலாம். இது உங்கள் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோய் பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் தூங்காமல் சில மணி நேரங்கள் மட்டும் நீங்கள் தூங்குவதால் உங்கள் உடல் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படுவதோடு, ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இரவு உறக்கம் தான் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அதிகளவு அள்ளித் தருவதற்காக கடவுள் கொடுத்த கொடை என்று கூட நாம் கூறலாம். எனவே சீரற்ற உறக்கம் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இதய சம்பந்தமான நோய்களுக்கு ஆளாவார்கள் ...
Uncategorized

இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2023 புதன்கிழமை. நடப்பவை எல்லாம் விதி என்று எண்ணாமல் நமது திறந்த ஜாதகத்தை கணித்து அதில் எந்தெந்த கிரகங்கள் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தக்க பரிகாரங்களை செய்து வருவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் ஜாதகத்தில் கூறப்பட்டிருக்கும் கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உங்கள் செயல்கள் எதுவாக இருந்தாலும் அதை திட்டமிடுதல் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். மேலும் உங்களுக்கு ஏற்படும் அசுப பலன்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம். மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று உங்கள் ஆற்றலை உணரக்கூடிய நாள் என்பதால் நீங்கள் உங்கள் இலக்குகளை நிர்ணயித்து முயற்சி செய்தால் வெற்றி மேல் வெற...
Uncategorized

“இரவில் தூங்காம இருந்தா இதய நோய்..!” – ஆபத்து ஏற்படுதா..!

சராசரியாக ஒவ்வொரு மனிதனும் தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியாக உறங்க வேண்டும். அப்படி உறங்கினால் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தூக்க இன்மை காரணமாக சிலருக்கு இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைக்கும் போது உங்கள் தசைகள் வலிக்க ஆரம்பித்து மூட்டுக்கள், எலும்புகளில் வீக்கம் ஏற்படலாம். இது உங்கள் இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோய் பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் தூங்காமல் சில மணி நேரங்கள் மட்டும் நீங்கள் தூங்குவதால் உங்கள் உடல் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படுவதோடு, ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இரவு உறக்கம் தான் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அதிகளவு அள்ளித் தருவதற்காக கடவுள் கொடுத்த கொடை என்று கூட நாம் கூறலாம். எனவே சீரற்ற உறக்கம் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இதய சம்பந்தமான நோய்களுக்கு ஆளாவார்கள...
Uncategorized

“சித்திரைக் கனிக்கு வாங்கிய மாம்பழத்தில் செய்யலாமா? – மாம்பழ அல்வா..!

மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான்.குறிப்பாக வகை வகையான  மாம்பழங்களை வாங்கி அதை சாப்பிடுவதில் மும்மரமாக இருப்பார்கள். அந்த வகையில்  சித்திரை கனிக்கு வாங்கிய மாம்பழத்தைக் கொண்டு மாம்பழ அல்வா எப்படி செய்யலாம் என்பதை இந்த சமையல் பதிவில் விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாம்பழ அல்வாவின் சுவையை ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும், மீண்டும் சுவைக்க ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட மாம்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போமா. மாம்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள் 1.மாம்பழக் கூழ் ஒரு கப் 2.சர்க்கரை கால் கப் 3.நெய் 3 டீஸ்பூன் 4.முந்திரி பருப்பு 10 செய்முறை முதலில் நன்கு பழுத்த மாம்பழத்தை எடுத்துக் கொண்டு அதை சிறப்பாக கழுவி பால் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதன் தசை பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸி ஜாரில...
Uncategorized

“அட ஆண்டவா தர்பூசணிய பயன்படுத்தினால் முகப்பரு வராதா..!” – ஆச்சரியமா இருக்க..!

இன்று இருக்கும் இளம் பெண்களுக்கு மன அழுத்தம் மட்டுமல்லாமல் சரியான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாததாலும், ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக முகப்பரு வருவதும், போவதும் இயல்பாகி விட்டது. இன்னும் இந்த முகப்பருவை தடுக்க பல வகைகளில் அவர்கள் முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல், அழகு நிலையங்களுக்கு சென்று பணங்களை கொட்டிக் கொடுத்து வருகிறார்கள். எனினும் இதற்கான ரிசல்ட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த நிலையை தகர்த்தெறிந்து இயற்கையான முறையில் உங்கள் முகப்பருக்களை தடுக்க நீங்கள் தர்பூசணி பழத்தை பயன்படுத்தினால் போதும். உங்கள் முகத்தில் இருந்த பருக்கள் எங்கே என்று கேட்கத் தோன்றும் விதத்தில் உங்கள் முகம் பளபளப்பாக முகப்பரு இல்லாமல் மாறிவிடும். அதற்கு நீங்கள்  கோடையில் தர்பூசணி பழத்தை அப்படியே வெட்டி சாப்பிடலாம் அல்லது இந்த பழத்தை நீங்கள் உங்கள் முகத்திற்கு பேஸ் மாஸ்காக பயன்படுத்துவதின் மூலம் முகப்பருவை எ...
Uncategorized

“அப்படி சொல்லுங்க இனி தனியார் பள்ளியில் இலவச கல்வி..!” – தமிழக அரசு உத்தரவு..!

தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு ஏழை பெற்றோர்களுக்கும் உள்ளது. இந்த கனவு இதுவரை அவர்களுக்கு கானல் நீராக இருந்து வந்தது. அதையெல்லாம் தகர்த்து எறிய கூடிய வகையில் தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் இனி மேல் தனியார் பள்ளிகளும் ஒரு குறிப்பிட்ட சதவீத மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதற்கு காரணம் தமிழக அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பு தான். ஆறு முதல் 14 வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்குமே இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தமிழக அரசு மூலம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டமானது அரசியல் அமைப்புச் சட்டம் 21 A ன் கீழ் அமைய உள்ளது. இந்த சட்டப்படி ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் நிறைவான தரமான முழு நேர கல்வி வழங்க வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது. எனவே அரசு பள்ளிகளில் மட்டும் இலவச கல்வி வழங்கப்பட்ட...
Uncategorized

“அடிக்கடி உங்கள் வீட்டில் தூசி ஏற்படுகிறதா..!” – இனி இப்படி சுத்தம் செய்யுங்க..!

வீட்டை சுத்தப்படுத்துவது என்பது இல்லத்தரசிகளுக்கு தற்போது பெரிய தலைவலியாகவே உள்ளது. எப்படி சுத்தம் செய்தாலும் வீட்டில் அடிக்கடி தூசி படிந்து வருவதால் எப்படி எல்லாம் சுத்தம் செய்வது என்று திட்டம் போட்டு செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அதிக அளவு தூசி வீடுகளில் இருந்தால் அவர்களுக்கு தூசியால் பல வியாதிகள் ஏற்படுவதோடு சுவாச பிரச்சனைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே வீட்டில் தூசிகள் அதிக அளவு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில முக்கிய குறிப்புகளை இந்த கட்டுரைகள் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் உங்கள் படுக்கை அறையில் விரித்திருக்கும் பழைய படுக்கை விரிப்புகளை எப்போதும் அப்படியே வைக்காதீர்கள். முடிந்தவரை தூசியைத் தட்டி விட்டு புதிய படுக்கை உறைகளை போடுவது நல்லது. தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றுங்கள். ஏனெனில் அதிக அளவு தூச...
Uncategorized

“புதிய தோசை கல்..!” – இப்படி பழக்கினால் தோசை மொறு மொறு என வரும்..!

வீட்டில் புதிதாக தோசை கல் வாங்கி வைத்திருந்தால் அந்த தோசை கல்லை நீங்கள் பழக்காமல் தோசை ஊற்றும்போது அது சரியாக தோசை கல்லில் இருந்து மேலே எழும்பி வராது. மேலும் உங்கள் இரும்பு தோசை கல்லை பழக்குவதின் மூலம் தான் எளிதாக தோசை கல்லை பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் கிரிஸ்பியாக தோசை வர நீங்கள் கீழே இருக்கக்கூடிய குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வீட்டு தோசை கல்லை பழக்கப்படுத்தி மொறு, மொறு தோசையை வார்த்தை எடுங்கள். அதற்காக நீங்கள் புதிய தோசை கல்லை வாங்கி வந்தவுடன் அதில் தோசை ஊற்றாமல் தண்ணீரை ஊற்றி சோப்பை போட்டு இரண்டு முதல் நான்கு முறை நன்கு கழுவி எடுக்க வேண்டும். அதோடு இரும்பு மஞ்சி போட்டு கீறல் விடும்படி நீங்கள் கழுவ வேண்டாம். உங்கள் தோசை கல்லை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சிறிதளவு நீரை ஊற்றி விடுங்கள். அந்த நீர் வற்றிய பிறகு தேங்காய் மஞ்சள் கொண்டு எல்லா இடங்களிலும் நன்கு தேய்த்து விடுங்க...
Uncategorized

“கோடையில் மஜா பண்ண வெறும் 2000 ரூபாயில் மினி ஏசி..! – நீங்களும் வாங்குங்க..!

அடிக்கின்ற வெயிலுக்கு ஏசி வாங்க வேண்டும் என்றால் பெரும் தொகை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு இஎம்ஐ கட்டினால் மட்டுமே ஏசி வாங்கி பயனடைய முடியும் என்ற நிலைமை தற்போது உள்ளது. இந்த வெயிலுக்கு வீட்டில் 24 மணி நேரம் பேனை போட்டு சுற்ற விட்டாலும் வெக்கை காற்று அடித்து நம்மை பாடாய்படுத்துகின்ற இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் மினி ஏசியை உங்கள் பட்ஜெட்டில் வாங்கி பயன்பெறலாம். என்னது.. வெறும் 2000 ரூபாயில் மினி ஏசியா என்று நீங்கள் நம்ப முடியாமல் தவிர்க்க வேண்டாம். உண்மையிலேயே ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் மின்சார இணைப்பே இல்லாத இதுபோன்ற ஏசிகளை வாங்கி நீங்கள் பயன் அடைய முடியும். மேலும் இந்த மினி ஏசி பேன் தற்போது amazon flipkart போன்ற இணைய சந்தைகளில் வாங்கி நீங்கள் பயன் பெற முடியும். இதற்காக நீங்கள் அரை லிட்டர் தண்ணீரை பயன்படுத்தின...