Uncategorized
“வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்..!” – வாஸ்துபடி எது என்று தெரிந்து கொள்ளலாமா?
வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்:வாஸ்துபடி வீட்டில் சில மரங்களை வளர்ப்பதால் நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகரித்து குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். அந்த வகையில் நீங்கள் உங்கள் வீட்டில் எந்தெந்த மரங்களை வளர்க்கலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்க வேண்டிய மரங்கள் என்னவென்றால் வேப்பமரம், தென்னை மரம், பாக்கு மரம் போன்ற மரங்களை வைத்து வளர்ப்பது சிறப்பாக இருக்கும்.
பழ மரங்களைப் பொறுத்தவரை மாதுளை, மாமரம், பலாமரம், கொய்யா போன்ற மரங்களை வளர்த்து பயன்படலாம்.
மேலும் இந்த மரங்களை நீங்கள் வீட்டில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் விதைக்கலாம். ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான மரங்களை வைத்து வளர்ப்பது குடும்பத்திற்குள் நல்ல சுபிட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
நீங்கள் உங்கள் தோட்டத்தில் அதிக அள...