Uncategorized
“மல்லிகை செடியை தாக்கும் பூச்சிகள்..! – இப்படி விரட்டினால் ஓடிவிடும்..!
மல்லிகைப்பூ செடியில் ஒரு பூ பூத்து விட்டாலே நமது வீடே மணக்கும் என்று கூறலாம். அப்படிப்பட்ட அந்த செடியில் திடீர் என பூச்சிகள் தாக்கம் அதிகரிக்கும். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவோம்.
பொதுவாக இந்த மல்லிகைப்பூ செடியில் பூப்பேன், மொட்டுப்புழு, செஞ்சிலந்தி, வேர் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட்டு மல்லி செடியை வாட வைத்து விடும்.
இதன் காரணத்தினால் பூக்க வேண்டிய பருவத்தில் பூக்கள் அதிகம் கிடைக்காமல் செடி பட்டுப்போக வாய்ப்புள்ளது.எனவே இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மல்லிகைப்பூ செடியில் ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பதற்கான முறைகள்
மல்லிகை பூச்செடியில் மொட்டு ஈ, மொட்டு புழு, பூ பேன்கள் ஏற்பட்டால் மொட்டுக்கள் செடிகள் தங்காமல் அப்படியே உதிர்ந்து விடும். இதனை சரி செய்ய நீங்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் அக்ரோ சர்வீஸ் கடைகளில் கிடைக்கும் மானோகேரோட்டோப...