Uncategorized
“ஆங்கில மருந்துக்கு சவால் விடும் கீழாநெல்லி..!” – மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாமா?
கீழ் காய் நெல்லி என்று அழைக்கப்படுகின்ற இந்த கீழாநெல்லி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. பொதுவாக வயல், வரப்புகளிலும் கிராமத்தில் இருக்கும் வீட்டுப் பகுதிகளிலும் அதிகளவு காணப்படக்கூடிய இந்த கீழாநெல்லியில் இருக்கக்கூடிய பில்லாந்தின் என்ற முக்கிய வேதிப் பொருளானது மருத்துவ குணம் நிறைந்தது.
கீழாநெல்லியில் இருக்கக்கூடிய இந்த பில்லாந்தின் என்ற வேதிப் பொருளால் தான் இதன் இலைகளில் கசப்புத்தன்மை அளவு உள்ளது. மேலும் கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்துமே மருந்து பொருளாக இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.
கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்
கீழாநெல்லி வேரை 10 கிராம் அளவு எடுத்து அதை நன்கு இடித்து பால் அல்லது மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். மேலும் கல்லீரலை பலப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த சாறுக்கு உள்ளது.
சொரியாசிஸ் என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இதன் இலைச் சாறை மஞ்சல...