Uncategorized
70 வயதில் நடிகர் செந்திலுக்கு நடந்தது என்னவென்று தெரியுமா?
தமிழ் சினிமாவின் நடிகர் செந்தில் மிகச்சிறந்த காமெடி நடிகர். பாக்யராஜ் நடித்த பொய்சாட்சி படத்தில் தான் செந்தில் அறிமுகமானார். அதன்பின், கவுண்டமணி - செந்தில் என்ற காமெடி கூட்டணி உருவானது. தமிழ் சினிமாவை, இந்த கூட்டணி நீண்ட காலம் ஆட்சி செய்தது.
கடந்த 1980-90களில், கவுண்டமணி - செந்தில் படங்கள் போஸ்டரில் இருந்தாலே, அந்த படத்துக்கு மக்கள் சென்றுவிடுவர். அந்த அளவுக்கு படத்தின் ஹீரோ - ஹீரோயினுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இந்த காமெடி ஜோடிக்கு தரப்பட்டது. இவர்களுக்கு என, வீரமணி என்பவர் தனியாக காமெடி டிராக் எழுதினார்.
சத்யராஜ், ராமராஜன், ராஜ்கிரண், முரளி போன்ற நடிகர்களின் படங்களில் இந்த காமெடி கூட்டணி இருந்ததால், பல படங்கள் அபார வெற்றியை தொட்டது, காமெடிக்கு, தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தனியாகவும், சில படங்களில் செந்தில் நடித்து தனிமுத்திரை பதித்திருக்கிறார். அதில், பாய்ஸ் படத்தில் அன்னவெறி கண...