Tuesday, September 24
Uncategorized

“முகத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் சில முக்கிய ஃபேஸ் பேக்..!” – நீங்களும் யூஸ் பண்ணலாம்..!

என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா…  என்ற பாடல் வரிகள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அழகு என்பதை ஒவ்வொரு பெண்களும் விரும்புகிறார்கள். அதிலும் முக அழகை பராமரிப்பது அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை என்றுமே கைவிட்டதில்லை. இவர்கள் 60 இலிருந்து 80 வரை முக அழகை பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முக அழகை பேணுவதற்கு உரிய சில முக்கிய ஃபேஸ் பேக் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். முக அழகை பராமரிக்க உதவும் ஃபேஸ் பேக் 1.மஞ்சள், வெள்ளரி பேஸ் பேக் மருத்துவ குணம் நிறைந்திருக்கும் மஞ்சளில் அதிக அளவு ஆன்ட்டி செப்டிக் துகள்கள் உள்ளது. இது சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை பாதுகாக்க உதவி செய்கிறது. அது போல் வெள்ளரிக்காயும் மிகச்சிறந்த நீர்ச்சத்து கொண்ட ஒரு காய். இந்த நீர் சத்தானது உடலின் ஈரப்பதத்தை பேணுவதற்கு உதவி செய்கிறது. வெள்ளரிக்காயை அரைத...
Uncategorized

“முடி நீளமா வளரணுமா..!” – அப்ப நீங்க வேம்பாளம் பட்டைய பயன்படுத்துங்க..!!

எல்லோருக்குமே முடி நீளமாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக பல்வேறு விதமான எண்ணெய்களை பயன்படுத்தி கூந்தல் பராமரிப்பில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்கள்.  அப்படி இருந்தும் அவர்கள் நினைத்தபடி முடி நீளமாக வளரவில்லை என்ற எண்ணம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். அதற்கு இந்த ஒரே ஒரு பட்டை போதும் அதுதான் வேம்பாளம் பட்டை. முடியை நீளமாக்கும் வேம்பாள பட்டை பொதுவாக பெண்களின் ஹார்மோன் பிரச்சனை காரணமாக அதிக அளவு முடி உதிர்தல் ஏற்படும். அப்படி ஏற்படக்கூடிய சமயத்தில் நீங்கள் இந்த வேம்பாளம் பட்டை எண்ணெயை உங்கள் முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். இது உங்கள் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும். இந்த வேம்பாள எண்ணெய் தயாரிக்க நீங்க வேம்பாள பட்டை இரண்டு சிறிய...
Uncategorized

.”சந்தைக்கு புதிதான வெற்றிலை பஜ்ஜி..!” – நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!

அந்தி மயங்கும் மாலை நேரம் என்றால் பஜ்ஜி கடைகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் மழை பெய்து விட்டால் பஜ்ஜிக்கும், வடைக்கும் நீண்ட கியூவில் நின்று அதை ரசனையோடு அனுபவித்து சாப்பிடக்கூடிய மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி என பல வகைகளில் பஜ்ஜிகளை சுவைத்திருப்போம். அதேபோல உளுந்து வடை, ராகி வடை, முப்பருப்பு வடை, ஆமவடை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் சாப்பிட்ட பிறகும் இன்னும் ஏதாவது சாப்பிட்டாலும் அது உங்களுக்கு பிரச்சனையை தராமல் எளிதில் ஜீரணத்தை தூண்டக்கூடிய வகையில் இருந்தால் அதையும் ஒரு பிடி பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் நீங்கள் இருந்தால் உடனே நீங்கள் வெற்றிலை பஜ்ஜியை செய்து சாப்பிடலாம். வெற்றிலை பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள் ஐந்து வெற்றிலை 2.கடலை மாவு 200 கிராம் 3.அரிசி மாவு 50 கிராம் 2 டேபிள் ஸ்பூன் அளவு மைதா மி...
Uncategorized

“மணக்க மணக்க மொச்சைக்கொட்டை குழம்பு..!” – விரும்பிய படி சாப்பிட இப்படி செய்யுங்க..!

பருப்பு சாம்பார், வறுத்தரைத்த சாம்பார், மிளகு அரைத்த குழம்பு, புளிக்குழம்பு, வத்தக்குழம்பு என்று பல்வேறு வகையான குழம்புகளை மதிய நேரத்தில் சாப்பிட்டு போர் அடித்தால் நீங்கள் கட்டாயம் மொச்சைக்கொட்டை குழம்பு செய்து சாப்பிட்டால் உங்கள் மனது ஒரு ஃபுல் பில் நிலையை அடையும். இப்படிப்பட்ட அருமையான சுவையான மொச்சைக்கொட்டை குழம்பை எப்படி செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். மொச்சைக்கொட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள் 1.மொச்சை 100 கிராம் 2.மல்லி ஒரு டீஸ்பூன் 3.கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் 4.உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் 5.பச்சரிசி ஒரு டீஸ்பூன் 6.கசகசா ஒரு டீஸ்பூன் 7.சோம்பு ஒரு டீஸ்பூன் 8.சீரகம் ஒரு டீஸ்பூன் 9.மிளகு அரை டீஸ்பூன் 10.பட்டை இரண்டு 11.கிராம்பு மூன்று 12.ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம், 13.கருவேப்பிலை 14.சின்ன வெங்காயம் 15.தேங்காய் துருவல் 16.தக்க...
Uncategorized

“கோடி கோடியாய் பணத்தைக் கொட்டித் தரும்..!” – கொட்டாங்குச்சி பரிகாரம்..!!

பூஜைக்கு என பல வகையான பாத்திரங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதைவிட மிகச் சிறந்த ஒரு பொருள் உள்ளது என்றால் அது கொட்டாங்குச்சி தான். தேங்காயில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த கொட்டாங்கச்சியை பயன்படுத்தி தான் நாம் இந்த பரிகாரத்தை செய்து கோடி கோடியாக பணத்தை அள்ள போகிறோம். பொதுவாகவே தேங்காயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள் குடியிருப்பதாக நம் மூத்தோர்கள் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தேங்காயில் இருக்கக்கூடிய தண்ணீருக்கு எதிர்மறை ஆற்றலை தகர்த்து எறிய கூடிய தன்மை இருப்பதால்தான் ஒவ்வொரு விசேஷங்களிலும் தேங்காயை முதலில் உடைத்து காரியங்களை நாம் துவங்கிறோம். அது மட்டுமல்ல தேங்காயை உடைத்து துவங்கக்கூடிய காரியம் எல்லாமே வெற்றியைத் தரும் என்பது இந்து சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. இப்போது தேங்காய் இருக்கும் கொட்டாங்கச்சியை வைத்து எப்படி பரிகாரம் செய்யலாம்...
Uncategorized

“உங்க வீட்டு பொண்ணுங்க இப்படி பொட்டு வெச்சா..!” – ஆளுமை, அதிகாரம் அந்தஸ்து கூடுமாம்..!!

இன்றைய காலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் முகத்தில் பொட்டு வைப்பதை அழகியல் சார்ந்த விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவர்கள் வைக்கும் பொட்டை வைத்து அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் சேர்வதோடு ஒரு அந்தஸ்தும் கிடைக்கும் என்பது அவர்களுக்கு புரியவில்லை. மேலும் பெண்கள் நெற்றியில் கீழே கூறிய படி பொட்டினை வைத்து வந்தால் கட்டாயம் ஆட்ட ஐஸ்வரியங்களும், சகல சம்பத்தோடு ஆளுமை திறனோடு விளங்குவீர்கள். பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கும் முறை பொதுவாக பெண்களின் நெற்றியை அப்படியே ஏதும் வைக்காமல் வெறுமையாக விடுவது மிகவும் தவறானது எப்போதும் நீங்கள் திலகம் வைத்தபடி இருப்பது தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்மை சேர்க்கும். ஆரம்ப நாட்களில் நமது முன்னோர்கள் இந்த பொற்றினை வைத்துக் கொள்வது அவர்களை காத்துக் கொள்ளத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதை பொட்டு வைப்பதன் மூலம் எப்படி காத்துக் ...
Uncategorized

“ரத்தச் சோகையை நீக்கும் சூப்பர் கீரைகள்..!” – வேஸ்ட் பண்ணாம சாப்பிடுங்க..!

நமது நாட்டைப் பொறுத்தவரை பலவகையான கீரை வகைகளை நாம் உணவில் எடுத்துக் கொண்டு வருகிறோம். குறிப்பாக அரைக்கீரை, பாலக்கீரை, தண்டங்கீரை, புளிச்ச கீரை, வெந்தயக்கீரை முருங்கைக்கீரை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.  இன்னும் கிராமப்புற பகுதிகளில் பயிரிடப்படாமல் தானாக வளரும் கீரைகளை அவர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். இதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை அடைந்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் கீரைகளை நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்வதின் மூலம் இரத்த சோகையை குறைத்துக் கொள்ள முடியும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கீரையில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது. என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தினமும் கீரையில் உட்கொள்வதின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம். கீரைகளை உட்கொள்வதின் மூலம் கிடைக்கும் பயன்கள் உணவில் நீங்கள் தினமு...
Uncategorized

“அட ஆரஞ்சு பழத்துல இவ்வளவு நன்மைகளா? ” – இனி வேண்டாமுனு சொல்லாம சாப்பிடுங்க..!

சிட்ரிக் வகையைச் சேர்ந்த ஒரு அருமையான சுவை நிறைந்த பழம் தான் ஆரஞ்சு. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டு இருப்பதால் அனைவரும் விரும்பக்கூடிய பழங்களின் வருகையில் இதுவும் ஒன்றாக இணைந்துள்ளது. மேலும் இது ஆரஞ்சு பழ சீசன் என்பதால் இந்த பழத்தின் விலை சற்று மலிவாக கிடைக்கிறது. எனினும் நீங்கள் அனைவரும் அந்த பழத்தை விரும்பி உண்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும். அப்படிப்பட்ட ஆரஞ்சு பழத்தில் இருக்கக்கூடிய அபரிமிதமான நன்மைகள் என்னென்ன என்பது பற்றி விளக்கமாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நன்மைகள் ஆரஞ்சு பழம் நமது உடலில் உள்ள நீர் சத்தை பாதுகாக்க உதவக்கூடிய வகையில் நீர் ஏற்றத்தை தரக்கூடிய பழம் என்று கூட கூறலாம். உங்கள் உடலில் இருக்கும் நீர்சத்தை அதிகரிக்க இந்த பழம் உதவுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள இதில் இருக்க...
Uncategorized

இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2023 சனிக்கிழமை. நமது வாழ்க்கை எனும் சித்திரத்தை சிறப்பாக நாம் வரைய வேண்டும் எனில் அதற்கு ஜோதிடம் கூறக்கூடிய நல்ல பலன்களையும், தீய பலன்களையும் நன்கு ஆராய்ந்து அதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையை தரமாக அமைத்துக் கொள்வதின் மூலம் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளையும் நீங்கள் அடைய முடியும்.  அப்படிப்பட்ட ஜோதிட கலையை நீங்கள் நம்பி செயல்பட்டால் கட்டாயம் உங்களுக்கு ஏற்படுகின்ற அசுப பலன்களில் இருந்து விடுபட தக்க பரிகாரங்களை உரிய நேரத்தில் செய்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு கிரகங்களின் கிரக நிலையை பொறுத்தே மனிதர்களின் நன்மை மற்றும் தீமைகள் அமைகிறது. அது மட்டுமல்லாமல் ஜென்மத்தில் செய்த நன்மை தீமைகளை அடிப்படையாகக் கொண்டு இவை அனைத்தும் நடக்கும். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற...
Uncategorized

“படம் நடிச்சு 5 வருஷம் ஆச்சு..” – நடிகை ஸ்ரீதிவ்யா.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

நடிகை ஸ்ரீதிவ்யா முழு மூச்சாக படங்களில் நடிக்க நடிப்பதை நிறுத்தி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் ஸ்ரீதிவ்யா வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். இப்படி நடித்துக் கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்வி படங்கள் அமைந்தன. இதனால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவான சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தற்போது வரை வெறும் இரண்டாவது திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். அதிலும் இவர் நடிப்பில் உருவாகி வரும் ரெய்டு என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படி சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும்...
Exit mobile version