Tuesday, September 24
Uncategorized

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை கண்டுகளிக்கும் பிரதமர்கள் !

குஜராத்தின் அகமதாபாத்தில் மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் பிரதமர்கள் இருவரும் மைதானத்தை சுற்றி  வலம் வந்தனர். போட்டியைக் காண 1.32 லட்சம் பார்வையாளர்கள் மைதானத்திற்கு வந்திருக்கிறார்கள் . போட்டிக்கு முன்னதாக வீரர்களை மோடியும் அல்பானிஸும் சந்தித்து ஊக்கமளித்தனர். நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர், தன்னை அழைத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு, அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியைப் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் கூறினார். ...
Uncategorized

இந்த செடிகள் எல்லாம் உங்க வீட்டின் முன்னால் இருந்தா… உடனடியா நீக்கிருங்க..!!

எதிர்வரும் தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் மரம் நடுதல் கட்டாயம் என்று பேசி வரக்கூடிய நாம் நம் வீட்டுக்கு முன் இருந்த செடிகள் இருந்தால் அதை கட்டாயம் நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.  அப்படி நீக்க வில்லை என்றால் உங்கள் வீட்டிற்கு எண்ணற்ற பாதிப்புகள் வரும் நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே அவர்கள் கூறிய பாதையில் செல்வது கட்டாயம் நமக்கு நன்மை தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கீழ்க்காணும் செடிகள் உங்கள் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது உங்கள் வீட்டுக்கு முன் பகுதியில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கி விடுங்கள். மேலும் இந்த செடிகளின் மூலம் உங்களுக்கு ஆபத்தை ஏற்படலாம் என்பதை உங்கள் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி எந்த செடிகளை நீங்கள் உங்கள் வீட்டின் முன் வளர்க்கக்கூடாது என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.  அவர்கள் கூறிச் சென்றார்கள...
Uncategorized

” வாஸ்து கோளாறுகளை சரி செய்யும் லக்கி பேம்பூ..!”- இப்படி வளர்த்துப் பாருங்க..!!

இன்று வாஸ்து பெரிதளவு மக்கள் மனதில் ஒரு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளதால் தங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக நேரடியாகவும் ஆன்லைனிலும் பல வகையான லக்கி பேம்பூ செடிகளை வாங்கி தங்கள் வீட்டுக்குள் கொண்டு வந்து வளர்க்கிறார்கள்.  அப்படிப்பட்ட இந்த பேம்பூ வாஸ்து படியும் ஆன்மீக ரீதியாகவும் மகாலட்சுமி வசிக்கக்கூடிய ஒரு மரமாக திகழ்கிறது என்றால் அது முற்றிலும் உண்மையானது. அது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய அசுத்த காற்றுகளை வெளியேற்றி தூய காற்றினை எந்த மூங்கில் நமக்கு கொடுக்கிறது.  எனவேதான் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்களை நமது முன்னோர்கள் வீட்டில் வைத்து பயன்படுத்தி வந்தார்கள்.அப்படிப்பட்ட மூங்கில் செடியை கண்ணாடி ஜாடியில் கொஞ்சமாக நீர் ஊற்றி அதை மூழ்க வைத்து மூங்கில் செடியை வளர்த்தாலும் சரி அல்லது மண்ணில் போட்டு அந்த மூங்கில் செடியை ஒரு சிறிய தொட்டியி...
Uncategorized

“இதையெல்லாம் செய்யுங்க உங்க வீட்டுக்கு..!” – மகாலட்சுமி ஓடோடி வருவாள்..!!

 திருமால் மனைவியான மகாலட்சுமி செல்வத்திற்கு தலைவியாக விளங்குகிறாள். இவள் பார்வை படும் இடமெல்லாம் செல்வ செழிப்பாகும். ஐஸ்வரியங்கள் எட்டு திக்கும் இருந்தும் வந்து குவியும்.  அப்படிப்பட்ட மகாலட்சுமியை உங்கள் வீட்டுக்கு ஓடோடி வர வைக்க சில வாஸ்து முறைகள் இருக்கிறது. அந்த முறைகளை நீங்கள் கட்டாயம் கடைப்பிடித்தால் மகாலட்சுமி கட்டாயம் உங்கள் வீட்டில்  கட்டாயம் எழுந்தருளுவாள்.  மகாலட்சுமியை வீட்டுக்கு வரவழைக்கும் வாஸ்து முறைகள்  உங்கள் வீடு எப்போதும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். தூய்மை இல்லாத இடத்தில் மகாலட்சுமி வரமாட்டார். எனவே நீங்கள் செல்வங்கள் வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வடக்கு திசை மகாலட்சுமிக்கு உரிய திசை என்பதால் அந்த திசையில் குப்பை சம்பந்தமான பொருட்களை வைக்க வேண்டாம். மேலும் அந்தப் பகுதிகள்...
Uncategorized

“அம்மே நாராயணா தேவி நாராயணா…!” – அற்புத சக்தி படைத்த ஆற்றங்கால் பகவதி ..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரப் பகுதியில் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை பெண்களின் சபரிமலை என்று அனைவரும் அன்போடு அழைப்பார்கள்.அந்த அளவு பெண்களுக்கு சிறப்பு மிகுந்த கோயிலாக இது விளங்குகிறது.  இந்தக் கோயில் மாசி மாதம் 10 தினங்கள் திருவிழா படு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவில் ஒன்பதாம் நாளில் பொங்கல் செய்து வழிபாடு செய்வார்கள்.  இந்த பொங்கலை செய்வதற்காக கோயில் வளாகத்தில் பண்டார அடுப்பில் தீமூட்டி கோயிலை சுற்றியுள்ள கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் அளவுக்கு   அனைத்து பெண்களும் இணைந்து பொங்கல் இடுவார்கள். பிறகு மதியம் 2 மணிக்கு மேல் அந்த பொங்கலை அம்மனுக்கு நெய்வேதியம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படி அவர்கள் வழிபாடு செய்யும்போது அங்கு பெண்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. ஆண்கள் யாரும் எந்த கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது. இங்கு பொங்கலை ...
Uncategorized

“ஐயர் வீட்டு தாமரை தண்டு வாடாம் வத்த குழம்பு..!” – சுட்ட அப்பளம் பேஸ் பேஸ்..!!

பருப்பு சாம்பார், வறுத்தரைத்த சாம்பார், மொளகு அரைத்த குழம்பு,  பருப்பு, ரசம் என பலவகை சைடிஷ்  செய்து போர் அடிச்சிருக்கும். சில சமயம் புளிக்குழம்பு கூட வைத்து சாப்பிட்டு இருப்போம். எனினும் நாக்குக்கு சுவை ஏதும் தெரியாமல் இருக்கும் சமயத்தில் நீங்கள் வத்த குழம்பு வைத்து சாப்பிட்டால் படுஜோராக இருக்கும். அந்த வகையில் ஐயர் வீட்டில் தாமரை  தண்டு வத்தல் கொண்டு செய்யக்கூடிய வத்த குழம்பு எப்படி வைப்பது என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். தாமரை தண்டு வத்த குழம்பு வைக்க தேவையான பொருட்கள் 1.தாமரைக்தண்டு 100 கிராம் 2.துவரம் பருப்பு நூறு கிராம் 3.புளி சிறிதளவு 4.வரமிளகாய் நான்கு 5.மிளகு அரை டேபிள்ஸ்பூன் 6.சீரகம் அரை டேபிள்ஸ்பூன் 7.உளுத்தம் பருப்பு அரை டேபிள்ஸ்பூன் 8.மஞ்சப்பொடி ஒரு சிட்டிகை 9.பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை 10.கருவேப்பிலை ஒரு கொத்து 11.எண்ணெய் 50 மில்லி  செய்முறை உங்களுக்கு த...
Uncategorized

” நினைத்தாலே சுவைக்க தூண்டும் நெய் கத்திரிக்காய் தொக்கு..!” – இப்படி செஞ்சு அசத்துங்க..!!

 நித்தம் நித்தம் நெல்லு சோறு நேத்து வைக்க மீன் குழம்பு என்று பாடல் வரிகளில் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த மீன் குழம்புக்கு பதிலாக கத்திரிக்காயில் தொக்கு செய்து சாப்பிட்டால் அந்த நெல் சோறும் மிகச் சுவையாக இருக்கும் என்பதை நீங்கள்  சுவைத்த பின் அறிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட நெய் கத்திரிக்காய் தொக்கினை நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்து செய்து அசத்தினால் பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்.  அந்த அளவுக்கு வீட்டில் மணத்தை ஏற்படுத்தக் கூடிய நெய் கத்திரிக்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.  நெய் கத்திரிக்காய் தொக்கு செய்ய தேவையான பொருட்கள் 1.கத்திரிக்காய் பிஞ்சாக அரை கிலோ 2.ஒரு ஸ்பூன் நெய் 3.மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் 4.தேவையான அளவு உப்பு 5.50 கிராம் எள் 6.25 கிராம் நிலக்கடலை 7.மஞ்சள் தூள் சிறிதளவு 8.வரமிளகாய் 4 செ...
Uncategorized

“இனிமே முகத்துக்கு இப்படி நெய் தடவுங்க..!” ஹாலிவுட் ஸ்டாரா மின்னுங்க..!

இந்த உலகில் இருக்கும் எல்லா ஜீவராசிகளுமே தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில்  தீவிரமாக இருக்கிறார்கள் என்றால் அது உண்மைதான். அதிலும் தன் முக அழகை மேம்படுத்தி காட்ட என்னென்ன வழிகள் இருக்கோ அத்தனை வழிகளையும் ஃபாலோ செய்து அவர்கள் என்றும் இளமையானவர்கள் போல தங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது சமையலுக்கு நாம் பயன்படுத்தக்கூடிய நெய்யை நமது சருமத்திற்கு அழகு கூட்ட இப்படியெல்லாம் பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் இதனை படித்து நீங்களும் உங்கள் சருமத்தை மெருகேற்றிக் கொள்ளுங்கள். நெய்யினால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் நீங்கள் தினமும் நெய்யை உங்கள் முகத்திற்கு பூசி வருவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக வறண்ட சருமமாக இருப்பவர்களுக்கு வறண்ட சருமத்தை நீக்கி நார்மல் சருமத்திற்கு உங்கள் சருமத்தை கொண்டு வந்து விடுகிறது.  இதற்காக நீங்கள் செய்ய ...
Uncategorized

” தர்பூஸ் சீசன் ஆரம்பிச்சாச்சு..!” – மறக்காம வாங்கி சாப்பிட இத்தனை நன்ம உங்களுக்குத்தான்..!!

 கோடை காலம் தொடங்கி விட்டாலே அங்கங்கு தர்பூஸ் @ தர்பூசணி கூடாரங்களை பார்க்கலாம்.உடலில் நீரின் சமநிலை மாறுபடும் போது நா வறட்சியை நீக்க தர்பூசணியை அனைவரும் வாங்கி சாப்பிடுவார்கள்.  அப்படிப்பட்ட நீர் சத்து அதிகம் உள்ள இந்த தர்பூசணியை சாப்பிடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. 100 கிராம் தர்பூசணி பழத்தில் சுமார் 6.2 கிராம் அளவு மட்டுமே சர்க்கரை இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய வைட்டமின் சி சத்து இதில் அதிக அளவு உள்ளது. அதுமட்டுமல்லாமல் காயங்களால் ஏற்படும் பாதிப்புகளை மிக எளிதில் குணமாக்கக்கூடிய கொலாஜனை உற்பத்தி செய்ய இது உதவி செய்கிறது.  அதுமட்டுமல்லாமல் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் உங்கள் சருமத்தையும் கூந்தலையும் கண்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள...
Uncategorized

“நீச்சத்து மிகுந்த சுரைக்காய்…!” – கோடையில் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகளா?

 நீர் சத்து மிகுந்திருக்கும் சுரைக்காயில் வைட்டமின் பி வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவு உள்ளது. இந்த காயை பொருத்தவரை 96.07 சதவீதம் நீர் சத்தைக் கொண்டுள்ளது. மேலும் இதில் இரும்பு சத்தானது 3.2% உள்ளது. மேலும் இது தாதுப்பு, பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட் போன்ற சத்துக்களை கொண்டிருக்கும் இந்த சுரைக்காயை வெயில் காலத்தில் நீங்கள் அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற மருத்துவ நன்மைகளை அடைவதோடு உங்கள் உடலில் நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது விலை மலிவான காய் என்பதால் யாரும் இதை அதிக அளவு விரும்புவதில்லை. எனினும் இதில் உள்ள ஊட்டச்சத்து நிறைந்த நன்மைகளை கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால் கட்டாயம் நீங்கள் உணவில் எந்த காயையும் சேர்த்துக் கொள்வீர்கள். சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 👍சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய் இந்த சுரைக்காய். நீரழிவு நோயாளிகள்  அதிக அளவு அவ...