Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அந்த உறுப்பை Zoom பண்ணி மோசமாக.. பனிமலர் பன்னீர்செல்வம் பகீர் பேட்டி..!

பெரிய திரை, சின்னத்திரை நடிகைகளை போலவே சின்னத்திரையில் செய்தி வாசிப்பார்களாக விளங்கும் நபர்களுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. அந்த வகையில் பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பணிமலர் பன்னீர்செல்வம் செய்தி வாசிப்பாளராக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பனிமலர் பன்னீர்செல்வம்..

கோவையைச் சேர்ந்த பனிமலர் பன்னீர்செல்வம் பாலிமர் தொலைக்காட்சியில் ஆரம்ப நாட்களில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனதை அடுத்து நியூஸ் செவென் சேனல், புதிய தலைமுறை என பல்வேறு சின்னத்திரை சேனல்களில் பணியாற்றி இருக்கிறார்.

பெரிய ஹீரோயின்களைப் போலவே சமூக வலை தள பக்கத்தில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவார்.

---- Advertisement ----

மேலும் இவர் கடை திறப்பு விழா, விளம்பரப் படங்கள் உள்ளேற்றவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறார்.

அந்த உறுப்பை ஜூம் பண்ணி..

அது மட்டுமல்லாமல் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து அதிகளவு குரல் கொடுக்கக்கூடிய நபர்களில் ஒருவராக இருக்கும் பனிமலர் பன்னீர்செல்வம் பல பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி தைரியத்தோடு தன்னுடைய கருத்துக்களை முன் வைப்பார்.

இதில் குறிப்பாக திராவிடக் கருத்தியல் கருத்துக்களை பதிவிடக்கூடிய இவர் மிகச்சிறந்த பெண் ஆர்வலராக திகழ்கிறார். இதனால் தான் என்னவோ இவர் பெண்ணியம், திராவிடம், பெரியாரிசம் போன்றவற்றை ஆதரித்து குரல் கொடுக்கிறார்.

எப்போதும் மனதில் பட்டதை தைரியமாக சொல்லும் போல்ட் லேடி ஆக விளங்கும் இவர் அண்மை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார்.

பனிமலரின் பகீர் பேட்டி..

இந்த பேட்டியில் அவர் பேசும் போது ஒரு முறை புடவை விளம்பர வீடியோவில் நான் அப்படி இப்படி என்று திரும்பும் போது வெளியே தெரியக் கூடாத அங்கங்களான வயிறு மற்றும் மார்பு பகுதிகளை ஜூம் செய்து எடிட் செய்து ட்விட்டரில் பதிவேற்றி விட்டார்கள்.

இந்த விஷயம் தொடர்பாக நான் அழுது கொண்டே என்னுடைய தோழிகளிடம் சொன்னதை அடுத்து என்ன தான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் இது போன்ற சில்லித்தனமான நிகழ்வுகளால் பெண்கள் நிலை குலைந்து போவது உண்மை தான் என்று கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இது போன்ற அவலங்களுக்கு என்று தான் முற்றுப்புள்ளி வைப்பார்களோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற விஷயமாக எந்த விஷயத்தை மாற்றி விட்டார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top