அனாவசியமாக பேசினால் நடவடிக்கை பாயும்…. என நடிகை பார்வதி நாயர் விடுத்த எச்சரிக்கை….!!

மலையாளத்தில் மிக சூப்பரான நடிகையாக திகழும் நடிகை பார்வதி நாயர். மலையாள படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை நிரூபித்த இவருக்கு தமிழில் என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக ,எங்கிட்ட மோதாதே, வெள்ளை ரோஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

 இதன் மூலம் தமிழக ரசிகர்களின் இதயத்தில் நுழைந்து விட்ட இவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்கக்கூடிய நடிகைகளின் வரிசையில் பேசக்கூடிய நடிகையாக விளங்குகிறார்.

 இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து கை கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட உயர்ந்த பொருட்கள் திருட்டுப் போய் இருக்கிறது.

 இந்த பொருட்களை தன் வீட்டில் வேலையில் இருக்கக்கூடிய சுபாஷ் சந்திர போஸ் என்பவர் திருடி இருக்கலாம் என்ற  புகாரை இவர் போலீசில் அளித்துள்ளார்.மேலும் இந்த வழக்கினை பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் நியாயமான முறையில் தங்களது விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

 இந்த நிலையில் அந்த வீட்டில் பணிபுரியும் சுபாஷ் சந்திர போஸ் நடிகை பார்வதி பற்றிய சில தகவல்களை வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தனது வழக்கறிஞர் மூலம் நடிகை பார்வதி நாயர் கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

 நடிகை பார்வதி வீட்டில் பணியாற்றி வந்த சுபாஷ் கூறிய கருத்தில் ஏதேனும் உண்மைகள் உள்ளதா அல்லது இல்லையா என்பது பற்றி தனி குழுவாவது அமைத்து போலீஸ் விசாரணையை மேற்கொள்ளுமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

இதனை அடுத்து இவர் விடுத்திருக்கின்ற எச்சரிக்கையை பார்த்து பயந்து அந்தப் பணியாள் ஒதுங்கி செல்வாரா இல்லை மேலும் பல ரகசியமான செய்திகளை வெளியிட்டு ரசிகைகள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழக மக்களின் மனதிலும் பீதியை கிளப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version