பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் ( Pawan Kalyan ) தற்போது உஸ்தாத் பகத் சிங் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கு வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இது குறித்து பிரபல நடிகை பூனம் கவுர் ( Poonam Kaur ) கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார். நடிகர் நரேன் நடிப்பில் வெளியான நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர் குடும்பத்தில் பிரபலமாக இருப்பவர் நடிகை பூனம் கவுர்.
இந்நிலையில், நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள உஸ்தாத் பகத் சிங் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து தன்னுடைய கடுமையான விமர்சனங்களை பதிவு செய்திருக்கிறார் பூனம் கவுர்.
இது குறித்து அவர் பேசியதாவது நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள உஸ்தாத் பகத் சிங் ஃபர்ஸ்ட் போஸ்டரில் பகத் சிங்கின் பெயர் நடிகர் பவன் கல்யாண் காலடியில் இருக்கிறது.
ஒரு சுதந்திர போராட்ட வீரர்களை அவமானப் படுத்துவதற்கு சமமாகும். இதனை செயலை படக்குழு செய்திருக்கிறது. இந்த போஸ்டரை பட குழு உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் மற்றும் உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்து படக்குழு விளக்கம் கொடுக்குமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் இது பவன் கல்யாண் ஆணவத்தை காட்டுகிறது என்றும் தன்னுடைய கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் நடிகை பூனம் கவுர்.
ஆனால், பூனம் கவுர் எதோ உள்நோக்கத்துடன் பவன் கல்யானை தாக்குகிறார். படக்குழு இதனை வேண்டுமென்றே செய்ததாக தெரியவில்லை. பகத் சிங்கின் பெயரை நினைவூட்டும் விதமாக படத்தின் தலைப்பை வைத்து விட்டு அவரை அவமானப்படுத்துகிறது படக்குழு என்றால் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. போஸ்டர் டிசைனிங்கில் சாதரணமாக நேர்ந்த ஒரு விஷயத்தை இப்படி உள்நோக்கம் கொண்டு விமர்சிப்பது சரி இல்லை என்று பூனம் கவுரை விளாசும் ரசிகர்களும் இருக்க செய்கிறார்கள்.