மொகஞ்சதாரோ என்ற ஹிந்தி படத்தில் 2016 ஆம் ஆண்டு நடித்து தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய நடிகை தான் பூஜா ஹெக்டே.
தெலுங்கில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழை பொறுத்தவரை இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
இதனை அடுத்து அதிக அளவு தமிழ் படங்கள் இவருக்கு கிடைக்காத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்று அங்கு பரபரப்பாக பேசப்படும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். அந்த வகையில் 2014ஆம் ஆண்டு இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படமான ஒக லைலா கோஷம் என்ற திரைப்படம் இவருக்கு மிக நல்ல ஹிட் படமாக அமைந்தது.
ஹிந்தி படங்களிலும் அதிக அளவு நடித்து வரக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதோடு சில வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து விடுவார்.
அந்த வகையில்அம்மணி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட வீடியோக்களையும், புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.
இந்தப் புகைப்படத்தில் இவரது மேனி அழகு பக்காவாக வெளிப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் யானையோடு இவர் நின்று கொண்டு தந்திருக்கும் போசை பார்த்து அனைவரும் திகைத்து விட்டார்கள்.
கடற்கரையில் நின்றபடி இவர் காட்சி அளித்திருப்பதை பார்த்து இதை பார்க்க இரண்டு கண்கள் பத்தாது என்று இவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் புத்த சிலை பக்கத்திலும் நின்று கொண்டு இவர் வெளியிட்டு இருக்கும் வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம்.
இதனை அடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் வரும் அருள்மொழிவர்மனை தேடிக் கண்டுபிடிக்க தான் இவர் இலங்கை சென்று விட்டாரா? என்று கிண்டலாக ரசிகர்கள் கேலி பேசி இருக்கிறார்கள்.
இந்த வீடியோவை தொடர்ந்து இணையத்தில் பார்த்து வருவதால் இணையத்தில் வைவதான வீடியோக்களின் வரிசையில் இது ஒன்றாக மாறிவிட்டது என கூறலாம்.
ரசிகர்களின் மனதை கவரும்படி இந்த வீடியோ இருப்பதால் இரவு நேரத்தில் கூட இந்த வீடியோக்களை போட்டு போட்டு அவர்கள் பாட்டு தாகத்தை தீர்த்து வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.