கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்தவர் நடிகை பூர்ணா இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா காசிம் என்பதாகும் இவருடைய உண்மையான வயது என்ன என்பதை இது நாள் வரை இவர்கள் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டது கிடையாது.
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் பூர்ணா. அதனைத் தொடர்ந்து கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, சவரக்கத்தி, அடங்கமறு, காப்பான், தலைவி, விசித்திரன், படம் பேசும் பிசாசு, அம்மாயி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விலங்கியல் மூன்றாமாண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தில் நடித்திருந்த இவரை பார்த்த நடிகர் விஜய் ரேவதி பாதி.. அசின் பாதி கலந்து செய்த கலவை பூர்ணா என்று மேடையிலேயே வர்ணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட வாய்ப்புக்காக மொட்டை அடிக்கச் சொன்னாலும் தயார் என்று சினிமா மீதான தனது ஆர்வத்தை வெளிக்காட்டி இருக்கிறார் நடிகை பூர்ணா. சமீபத்தில் நடிகை பூர்ணாவை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள நாடகமாடிய கும்பலை சாதுரியமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார் அம்மணி.
துபாயில் பல நகைக் கடைகள் வைத்திருப்பதாகவும் பத்துக்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளுக்கு சொந்தக்காரர் எனவும் ஒரு நபரை அறிமுகப்படுத்தி நடிகை பூர்ணா அவருக்கு திருமணம் செய்துவைக்க முற்பட்டனர் சில ஆசாமிகள்.
ஆனால் அந்த நபர் கேரளாவில் செல்போன்களுக்கு டெம்பர்ட் கிளாஸ் ஓட்டும் பெட்டிக் கடை வைத்திருந்தவர் என்பது பூர்ணா குடும்பத்தார் விசாரித்தபோது தெரியவந்தது.
இதனால் நூல் இலையில் தப்பித்தார் நடிகை பூர்ணா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுய் வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.